மச்சமுனி மூலிகையகம் (பாகம் 16 ) மச்சமுனி இயற்கை வரகு

வாழ்க்கைக்கு வரம் வரகு

வரகு என்பது நவ தானியங்களில் ஒன்று . நமது பழந்தமிழர் வாழ்விலும் ஆன்மீக ரீதியிலும் பின்னிப் பிணைந்திருந்தது . நமது வேக வாழ்க்கையில் நாம் மறந்து போன வரகை நாம் மீண்டும் உபயோகிக்க ஆரம்பித்தால் நம் வாழ்க்கைக்கு மீண்டும் வரமாக நம் ஆரோக்கியத்தை திருப்பித் தரும்.

நம் வாழ்வில் எல்லா தானியங்களையும் நாம் இயற்கைப் பேரழிவுகளில் இழந்துவிட்டாலும் , வரகு என்ற தானியம் மட்டும் நாம் இழந்துவிடாமல் இருக்க நம் முன்னோர்கள் வரகு என்ற தானியத்தை கோவில் கோபுரக் கலசங்களில் வைத்து பாதுகாத்துள்ளார்கள் . வரகு என்ற தானியம் கோவில்களில் இடி விழாமல் காக்க வல்லது என்பதும் ஒரு காரணம் .

ஏனெனில் முளைப்பதற்கு முன்னர் உறக்க நிலையில் இருக்கும் தானியத்தில் ஒரு உயிரோட்டம் எப்போதும் இருக்கும் .அந்த உயிரோட்டம் எப்போதும் அதன் முளைப்புத் திறனை பாதுகாப்பதுடன் அதைச் சுற்றி ஒரு காந்தப்  புலத்தையும் உருவாக்கி வைத்துள்ளது . அந்தக் காந்தப் புலம் பன்னிரெண்டு ஆண்டுகள்  அதிக அளவில் நிலைத்திருப்பது வரகு தானியத்தில் மட்டுமே . எனவேதான் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அஷ்ட பந்தன மஹா கும்ப அபிஷேகம் என்ற பெயரில் கும்பங்களில் உள்ள வரகு தானியத்தை மாற்றி , அதன் காந்தப் புலத்தை அதிகப்படுத்தி வைப்பார்கள் .

இவ்வளவு காந்தப்புலம் கொண்ட வரகை உள்ளே சாப்பிட்டால் நமது வான் காந்த ஆற்றல் அதிகரிக்கும் .இதனால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நிலைப்படுத்துவது , இந்த வான் காந்த ஆற்றலேயாகும். எனவே நோயற்ற வாழ்வு வாழ வரம் தரும் வரகு என்ற தானியமே . அதுவும் உரம் போடாத , பூச்சி மருந்து அடிக்காத வயலில் இயற்கையாக விளைந்த வரகு மிக , மிக உயர்ந்த பலன்களை அளிக்க வல்லது .

வரகு 1செய்திக்கு நன்றி தினகரன்
வரகு 2
செய்திக்கு நன்றி இணையம்
வரகு 3செய்திக்கு நன்றி தினகரன்
varaku milku satham paRRi thinamlar 1varaku milku satham paRRi thinamlar 2 2014-07-20 001செய்திக்கு நன்றி தினமலர்

மேற்கண்ட இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட ( ORGANIC  CULTURE ) வரகுக்கு  நீங்கள் நாட வேண்டிய முகவரியும் , மின்னஞ்சல் முகவரியும், அலைபேசி  எண்ணும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953

மச்ச முனி மூலிகையகம் என்பது , மச்ச முனி  வலைத் தள வாசகர்களாக இருந்த திரு அமீர் சுல்த்தான் அவர்கள் மற்றும் திரு ஸ்ரீதரன்  அவர்கள் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பெரும் தனவந்தரான திரு அமீர் சுல்த்தான் அவர்கள் , மற்றும்  சமுதாய நலன் கருதும் திரு  ஸ்ரீதரன் அவர்கள் ஆகியோர்களின் தன்னலம்  கருதாத சேவையால் மச்ச முனி மூலிகையகம் நன்றாக வளர்ச்சி அடைந்து பலரது நோய்களைத் தீர்த்து வருகிறது . அவர்களுக்கு மேலும் சம்பாதிக்க வேண்டிய தேவையும் , அவசியமும் இல்லை . சமுதாயத்திற்கு தங்களால் ஆன சேவையை செய்ய கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதி செயல்பட்டு வருகிறார்கள்  . அதற்காக அவர்களைப் பாராட்ட இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறோம் .

மச்ச முனி மூலிகையக மருந்துகள் தயாரிப்பதற்கான மூலிகைகள் பலவற்றை சாமீ அழகப்பனான எம்மால் , பல எளியவர்களைக் கொண்டு எமது மேற்பார்வையில் சுத்தமாக சேகரிக்கப்பட்டு , சென்னைக்கு அனுப்பப்படுகிறது .  இதன் மூலம் பல ஏழைகளுக்கு வாழ்வும் கிடைக்கிறது .

இந்த மருந்துகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய மாவட்ட வாரியாக முகவர்கள் நியமனம் செய்யப்பட்டால் அனைவருக்கும் இந்த மருந்துகள் எளிதில் சென்றடையும் என்று மேற்கண்ட இருவரும் விரும்பியதால் , மாவட்ட வாரியாக இந்த மருந்துகளுக்கு   முகவர்களாக  ஆக விரும்பும் நபர்கள் திரு அமீர் சுல்த்தான் அவர்களைத்  தொடர்பு கொள்ளவும் .

மேலும் மச்ச முனி மூலிகையக மருந்துகள் விற்பதன் மூலம் கிடைக்கும் பண வரவு எழைகளின்  நோய் தீர்க்கவும் ,நோய்களற்ற  சமுதாயத்தை உருவாக்க முப்பூ , குரு , அகரம் , உகரம் , மகரம் , சிகரம் பற்றிய ஆராய்ச்சிக்கும் செலவிடப்பட்டு வருகிறது . இதற்கு பல ஞானிகளின்  , யோகிகளின் உதவியும் உள்ளது . அவர்கள் நமக்கு உதவி செய்வது நம் தன்னலம் கருதாத தன்மையால்தான் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.