சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 12 ) ஆவாரைப் பிசின் ஒரு அற்புத மூலிகை

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 11 ) ஆவாரம்பூ ஒரு அற்புத மூலிகை என்ற பதிவை படித்துவிட்டு இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கவும் . அப்போ-துதான் தொடர்பு விட்டுப் போகாமல்  புரியும் .

ஆவாரம் பூ

ஆவாரைப் பிசின்

பெரு நீர் மறிக்கும் பிரமேகம் போக்கும்

வருநீர்ச் சுருக்குதனை மாற்றுந் – தருநீர்கை

பூணுமே னிக்கமலப் பொன்னே பிடகரெலாம்

பேணுமே காரிப் பிசின்

– ( பதார்த்த குண விளக்கம் )-

குணம்:-ஆவாரைச் செடியின் பிசினானது  வேகுமூத்திரத்தையும், பிரமேக ராகத்தையும் ,வாத கிரிச்சரத்தையும் போக்கும் .

செய்கை:-ங்கோசனகாரி

உபயோகிக்கும் முறை:- ஆவாரைப் பிசின் கிடைப்பது அரிது . ஏனென்றால் அதிலுண்டாகும் பிசினை எறும்புக் கூட்டங்கள் வந்து சிறிதும் விடாமல் தின்றுவிடும் .அப்படி அவைகளுக்கு இரையாகாமல் சர்வ ஜாக்கிரதையாக சேகரித்துக் கொண்டு வந்து பிசினை 2 – 3 குன்றி எடை தினம் 2 வேளை 2௦ – 40 நாள் பசுவின் பாலில் ( நாட்டுப் பசுவின் பாலில் மட்டுமே ) கலக்கிக் கொடுத்து வர விந்து நட்டம் , மது மேகம் ( சர்க்கரை வியாதி ) , தாகம்  , உட்காங்கை , முதலியவற்றிற்கு  இன்றியமையாத மருந்தாகும்.

இந்த பிசினை சேகரிப்பது என்பது பெரும் பிரயத்தனமானது ஏனெனில் ஆவாரைச் செடியின் வேரின் முண்டிலேயே  கருப்புக் கடி எறும்புகள் புற்றுக் கட்டி வைத்திருப்பதனால் பிசின் வெறியேறிய ஓரிரு நிமிடங்களில் இவை அவற்றைத் தின்றுவிடும் . எனவே அதற்குப் பதிலாக  முற்றிய ஆவாரைக் கட்டை மற்றும் வேர்க்குச்சிகளை ஊற வைத்து  , அந்த ஊறல் குடி நீரைக் குடித்து வர மேற்கண்ட அதே பலன்களைப் பெறலாம் . அந்தத் தண்ணீரில் ஆவாரைப் பிசின்  சத்து கரைந்திருப்பதால் சற்று பிசு பிசுப்புத் தன்மையுடன் இருக்கும் .ஒரு முறை ஊற வைத்த குச்சிகளை ஒரு வாரம் வரை உபயோகிக்கலாம் . அதன் சத்துக் குறைந்தவுடன் தண்ணீரில் அதன் பிசு பிசுப்புத் தன்மை  குறைந்தவுடன் வேறு குச்சிகளைப் போட்டு மீண்டும் ஊறல் குடி நீர் தயாரித்து , தினம் மூன்று வேளை குடித்து வர நோய்கள் நீங்கி , குறிப்பாக சர்க்கரை நோய் நீங்கி , சர்க்கரை நோயினால் சப்த தாதுக்களும் நலிந்த நிலை மாறி தாதுக்கள் வலுப்படுவதனால்   , உடல் பலமும் , உடல் நலமும் பெறலாம் .

மேற்கண்ட ஆவாரைத் தண்டின் பட்டையும்  , ஆவாரம் வேரின் பட்டையும்   மச்சமுனி சிறப்பு மது மேகச் சூரணத்திலும்  , சாதாரண  மது மேகச் சூரணத்திலும் சேர்க்கப்படுகிறது . இவை இரண்டிற்கும் நீங்கள் நாட வேண்டிய முகவரியும் , மின்னஞ்சல் முகவரியும், அலைபேசி  எண்ணும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953

மச்ச முனி மூலிகையகம் என்பது , மச்ச முனி  வலைத் தள வாசகர்களாக இருந்த திரு அமீர் சுல்த்தான் அவர்கள் மற்றும் திரு ஸ்ரீதரன்  அவர்கள் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பெரும் தனவந்தரான திரு அமீர் சுல்த்தான் அவர்கள் , மற்றும்  சமுதாய நலன் கருதும் திரு  ஸ்ரீதரன் அவர்கள் ஆகியோர்களின் தன்னலம்  கருதாத சேவையால் மச்ச முனி மூலிகையகம் நன்றாக வளர்ச்சி அடைந்து பலரது நோய்களைத் தீர்த்து வருகிறது . அவர்களுக்கு மேலும் சம்பாதிக்க வேண்டிய தேவையும் , அவசியமும் இல்லை . சமுதாயத்திற்கு தங்களால் ஆன சேவையை செய்ய கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதி செயல்பட்டு வருகிறார்கள்  . அதற்காக அவர்களைப் பாராட்ட இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறோம் .

மச்ச முனி மூலிகையக மருந்துகள் தயாரிப்பதற்கான மூலிகைகள் பலவற்றை சாமீ அழகப்பனான எம்மால் , பல எளியவர்களைக் கொண்டு எமது மேற்பார்வையில் சுத்தமாக சேகரிக்கப்பட்டு , சென்னைக்கு அனுப்பப்படுகிறது .  இதன் மூலம் பல ஏழைகளுக்கு வாழ்வும் கிடைக்கிறது .

இந்த மருந்துகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய மாவட்ட வாரியாக முகவர்கள் நியமனம் செய்யப்பட்டால் அனைவருக்கும் இந்த மருந்துகள் எளிதில் சென்றடையும் என்று மேற்கண்ட இருவரும் விரும்பியதால் , மாவட்ட வாரியாக இந்த மருந்துகளுக்கு   முகவர்களாக  ஆக விரும்பும் நபர்கள் திரு அமீர் சுல்த்தான் அவர்களைத்  தொடர்பு கொள்ளவும் .

மேலும் மச்ச முனி மூலிகையக மருந்துகள் விற்பதன் மூலம் கிடைக்கும் பண வரவு எழைகளின்  நோய் தீர்க்கவும் ,நோய்களற்ற  சமுதாயத்தை உருவாக்க முப்பூ , குரு , அகரம் , உகரம் , மகரம் , சிகரம் பற்றிய ஆராய்ச்சிக்கும் செலவிடப்பட்டு வருகிறது . இதற்கு பல ஞானிகளின்  , யோகிகளின் உதவியும் உள்ளது . அவர்கள் நமக்கு உதவி செய்வது நம் தன்னலம் கருதாத தன்மையால்தான் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 13) ல் தொடரலாம்.