ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 3

இன்று காலையில் நமது  சபையைச் சார்ந்த  நண்பர் திரு சங்கர நாராயணன் என்பவர் அலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் அய்யா படத்தில் உள்ள நபரின் கண்கள் நன்றாக உள்ளதா வேறு ஏதேனும் பிரச்சினைகள் இல்லையல்லவா ???? மூலிகைகளின் சக்தியை நிரூபிக்க இது போல அதிகமாக தீச் சோதனை முயற்சியில் ஈடுபட வேண்டுமா ??? என்று கேட்டார்.

முதலில் இது போன்ற கேள்விகளை எனக்கு நெருக்கமான நபர்களிடம் இருந்து வருவதை நான் அறவே விரும்பவில்லை. எனக்கு தெரியும் மூலிகைகளின் சக்தி என்ன என்று . முடிந்தால் நம்புங்கள் .உங்களை சோதித்து பார்க்க சொல்லவில்லை. மேலும்  இந்த பரிசோதனைகளினால் ஏதும் பிரச்சினைகள் வரவில்லை என்றாலும், உங்களின் இது போன்ற எண்ணங்கள் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும் வல்லமை உடையவை என்பது நீங்கள் அறியாதது. எனவே இது போல தீய எண்ணங்களை தவிருங்கள்.

நாங்கள் கெடுதலுக்காகவா சொல்கிறோம் .  நன்றாக இருக்கவே இதைக் கூறுகிறோம் என்று சொல்லாதீர்கள் . தீயதை நினைக்கவே நினைக்காதீர்கள் என்று நாம் சொல்கிறோம். பின் தீயதை கூறும் வரை வருவது தவறல்லவா ???? எண்ணமே அன்னம் என்பதை உணருங்கள் . எண்ணங்களின் வலிமையை உணருங்கள்.நல்லெண்ணங்களையே எண்ணுங்கள் .

அலோபதி மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளர்களை இவ்வாறே அவர்கள் குறை அறிவினால் பயமுறுத்தி , அரை உயிராக்கி தங்கள் அறிவுக் குறைவான அறிவினால் அவர்களையும் முட்டாளாக்கி ஒரு வியாதிக்கு மருந்து கொடுக்கிறேன் பேர்வழி, என்று அந்த மருந்தின் ( மருந்து என்ற பெயரில் விஷங்களைக் கொடுத்து,முக்கால்வாசி பெட்ரோலியம் சார்ந்த பொருட்களே மருந்துகள் என்ற பெயரில் விற்கப்படுகின்றன் ) பக்க விளைவுகளால் , பல வியாதிகளாக உரு மாற்றம் பெற்று,  அது இந்த அலோபதி மருந்துகளால்தான் உருவானது என்ற அறிவே இல்லாமல் நோயாளர்கள் பாவம் அறியாமையால் அவல நிலையில் அலைந்து முடிவில் இறந்தே போகிறார்கள்.

இதில் பெரும் அதிர்ச்சி என்னவென்றால் , யார் சித்த மருத்துவம் பார்க்க போகிறேன் என்றாலும் இந்த அலோபதி மருத்துவர்கள்“ சித்த மருந்துகளில் பாதரசம் கலந்திருக்கும் . பாதரசம் சிறு நீரகச் செயலிழப்புக்கு ( KIDNEY FAILURE ) காரணம் ஆகும்.“ என்று கூறுவது கேலிக் கூத்திலும், கேலிக் கூத்து . அதிகம் படித்த நோயாளிகள் நம்புவதும் , அதை நம்பி எங்களைப் போன்றவர்களிடம் கேள்வி கேட்பதும் அதை விடக் கொடுமை . இது வரை நாம் எழுதிய மருந்துகளில் எதில் பாதரசம் சேர்ந்திருந்தது . இதையாவது யோசிக்க வேண்டாமா ??? அட முட்டாள்தனத்தின் திலகங்களே ???  உங்களை எண்ணி அழுவதா ? சிரிப்பதா ? என்றே தெரியவில்லை !!!!!!!!

இவர்கள் இப்படி அப்பாவிகளாக இருக்கிறார்களே என்று காப்பாற்ற நாம் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்து இறைவன் நகைக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.என்னைவிடவா நீங்கள் இவர்களிடம் அன்பு வைத்துவிடப் போகிறாய் ??? இறைவனே இவர்கள் அறியாமையை விட்டு விட்டு என்று என்னிடம் வரப் போகிறார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கேட்பது போல உள்ளது இந்த சூழ்நிலை???

மற்றவை இருக்கட்டும் நத்தைச் சூரியைப் பற்றி மூலிகைக் குணபாடம் கூறுவதைப் பாருங்கள்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நமது கிராமங்களில் நத்தைச் சூரி கருப்பட்டி தேத் தண்ணீர்தான் குடிக்கப்பட்டு,விருந்தாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.தேத்தண்ணீர் என்றால் தற்போது தேயிலைத் தண்ணீர் என்ற அர்த்தத்தில் வழங்கப்பட்டு வருகிறது . ஆனால் தேத்தண்ணீர் என்றால் உடலைத் தேற்றும் தண்ணீர் என்ற அர்த்தத்தில் வழங்கப்பட்டு வந்துள்ளது இப்போது அனர்த்தமாய் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் ஒரு தேயிலை விளம்பரத்தில் தேயிலை உடலுக்கு கெட்டது என்றது யார் சொன்னது ??? என்று கேள்வி வேறு . அதில் தேயிலையுடன் கலப்பதாக கூறும் சித்த மருந்துப் பொருட்களை தனியே உபயோகித்தால் கிடைக்கும் பலன்கள் தேயிலையுடன் கலந்து உபயோகிக்க கொடுக்கும் போது அதன் நற்பலன்கள் அனைத்தும் கெட்டுவிடும் .

தேயிலை என்று இப்போது கொடுக்கப்படும் டஸ்ட் டீ முழுக்க தேயிலைத் தூசியில் நிறம் , மணம் , திடம் போன்றவற்றுக்கு பல பொருட்கள் சேர்க்கப்பட்டு குப்பையாக தரப்படுகிறது . இந்தத் தொல்லை குக் கிராமங்களையும் பாழாக்கி வருவதுதான் வேதனையிலும் வேதனை .

முன்பு கிராமங்களில் இருந்து வந்த காலையில் நீராகாரம் பருகும் பழக்கம் பித்தத்தை தணிக்கும் . ஆனால் இப்போது குடிக்கும் டீயினால் பித்தம் அதிகரித்து பல வியாதிக்கு ஆட்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள் . இந்த நிலைக்கு காரணம் தங்களது பழக்க வழக்க மாற்றமே காரணமே !!! , என்பதும் புரியாத நிலைமையில் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

ஆற்று நீர் வாதம் போக்கும் 

அருவி நீர் பித்தம் போக்கும்

சோற்று நீர் இரண்டும் போக்கும்.

என்பதை மறந்து போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இது நோயணுகா விதிகளில் உள்ள முக்கிய விடயம்.

நத்தைச் சூரி விதை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.கருப்பாக எள் நிறத்தில் கோதுமையில் உள்ளது போல ஒரு கோடும் இருக்கும். இதனைப் பொன் வருவலாக வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு வெந்நீர் கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி உபயோகிக்க உடல் ரீதியாக பல பிரச்சினைகளை வர வொட்டாமல் தவிர்க்கலாம்.

பதிவின் நீளம் கருதி இதன் பாகம் நான்கை அடுத்த ஓரிரு நாட்களில் பதிவிடுகிறேன்.

மற்றவை ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 4 ல் காண்க.