இந்துப்பு ( ROCK SALT )

அன்பார்ந்த வலை வாசகர்களே!!!

இடுகை மிகத் தாமதம் ஆனதற்கு மிக வருந்துகிறேன். எனது வலைப்பூவில் ஒரு அன்பர் கருத்துரையில் மற்ற வேலைகளை விட்டு காய சித்திக்கு வழி பார்க்குமாறு கூறி இருந்தார்.காய சித்தி மூலிகைகளை சாப்பிட ஆரம்பித்து இருப்பதால் மிக களைப்பாக இருப்பதால்,சற்று நேரம் கூட எழுத இயலாத அளவிற்கு களைப்பு வேறு.இதிலும் மீறி மின்வெட்டு வெட்டு வேறு.நிறைய அன்பர்களின் வேண்டு கோள் “எழுதுங்கள் என்று”.அனபர்களின் கட்டளைக் கிணங்க இதோ ஒரு விழிப்புணர்வுக் கட்டுரை.

யாரைப் பற்றி என்றால் திருவாளர் மத்திய அரசாங்கம் பற்றித்தான்.அரசு என்பது மக்களைக் காக்க என்பது போய்,மக்களை கொன்றாவது தனது முட்டாள் தனமான நிலைப்பாட்டை உறுதி செய்வது என்று மிகவும் வியாபார ரீதியாக நடக்கும் அரசாக நமது மத்திய அரசாங்கம் மாறிப் போனது நமது துரதிருஷ்டமே!!!ஒரு புறம் கூடங்குளம் அணு மின் நிலையத் திறப்பு என்ற அச்சுறுத்தல். கூடங்குளம் அணு மின்னிலையம் பற்றியும் அதன் உண்மைகள் பற்றியும் ஒரு தனிக் கட்டுரை எழுதுகிறேன்.

இன்று எழுத இருப்பது அரசு செய்த முட்டாள் தன வரிசையில்,ஒரு மைல் கல் முட்டாள்தனத்தினால் பொது மக்களும்,நம் எதிர்கால சந்ததிகளும் எப்படி பாதிக்கப்பட்டுள்ளனர்,இன்னும் எப்படி பாதிக்கப்பட போகிறார்கள் என்பது பற்றிய கட்டுரையே இது.

கல்லுப்பு என்ற சோற்றுப்பு சோடியம் குளோரைடு என்ற வேதிப் பெயர் கொண்டது.இதை செந்தமிழில் அளம் என்பார்கள்.முன்னாளில் சம்பளம் என்று தொழிளாளர்களுக்கு கொடுப்பது (சம்பு+அளம்=சம்பளம்) சம்பா என்ற நெல்லும் உப்பும்தான்.எனவே இது லட்சுமி வாசம் செய்யும் பணமாகக் கருதப்பட்டது.எனவே செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் உப்பு ,உறைமோர்,விதை நெல்,வசம்பு(பேர் சொல்லாதது),நிறை குடம்   போன்றவற்றை அறவே தர மாட்டார்கள். இது மட்டுமல்ல மாலை 6 மணிக்கு மேல் விளக்கு வைத்த பின் இவற்றைத் தர மாட்டார்கள்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உப்பை நஞ்சாக்கிவிட்டது ஒரு அரசு உத்தரவு .அயோடின் என்ற வேதிப் பொருளை உப்பில் கலக்க அரசு போட்ட முட்டாள்தனமான உத்தரவின் விளைவுகளை விவரிப்பதே இந்த பதிவின் நோக்கம்.

உப்பை சேர்க்காத பொருள்களே இல்லை.உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள்.இன்று உப்புள்ள பண்டம் குப்பையிலே என்று சொல்லும் அளவுக்கு அயோடின் கலந்த உப்பின் கோர முகம் உள்ளது.அயோடின் சேர்க்கப்பட்ட உப்பால் நமது உடலில் உள்ள தைராய்டு சுரப்பியின் செயல்பாடு பாதிக்கப்பட்டு முக்கியமான நாளமில்லாச் சுரப்பியான தைராய்டு சுரக்கும் சுரப்பு நீர்களானT3 ,T4 ஆகியவை பாதிக்கப்பட்டு விளைவாக உடலின் முழு வளர்சிதை மாற்றமும் பாதிக்கப்பட்டு நடைப் பிணங்களாக உலவும் அவலத்தை நாம் வெகு சீக்கிரம் நாம் காணலாம்.கண்கள் பிதுங்கி கழுத்தில் பெரும் கழலைக் கட்டியுடன் மக்களும்,எதிர்கால சந்ததிகளும் அல்லாட வேண்டாம் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.

அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் இதோ கீழே விவரிக்கப்பட்டுள்ளன.கீழே கொடுத்துள்ள கட்டுரையைப் பாருங்கள்.

 

நன்றி:- மல்லிகை மகள்

இந்த இணைப்பையும் பாருங்கள்

http://blogspot.us4.list-manage.com/track/click?u=1fbcbbddf2199b00d58a4c0ab&id=231b5d31a4&e=91275163e0

கல்லுப்பு என்ற சோற்றுப்புக்குப் பதிலாக பாறை உப்பு(ROCK SALT) என்ற இந்துப்பை உபயோகப்படுத்தினால் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.இதை ஹிந்தியில் சிந்தா நமக்கு என்பார்கள்.இந்த இந்துப்பு என்பதும் சோடியம் குளோரைடுதான்.ஆனால் மற்ற சில உப்புக்களும் சரியான விகிதாச்சாரத்தில் உள்ளது.மேலும் இந்த உப்பில் இந்த அயோடின் போன்ற விஷ வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுவதில்லை.

இந்த இந்துப்பு பல மருத்துவ குணங்கள் கொண்டது.இந்த இந்துப்பு சேர்ந்த மருந்தால் குருடனும் பார்வை பெற வல்ல மருந்தொன்றை திருமூலர் வைத்திய சாகரத்தில் சொல்லி உள்ளார்.அந்தப் பாடல்

இந்துப்பு திப்பிலி இயல் பீதரோகிணி

நந்திப்பூச் சாற்றில் நயந்து அரைத்திட

அந்தகன் கண்ணுக்கு அருந்ததி தோன்றிடும்

நந்தி நாதன் நயந்து உரைத்ததே.

-திருமூலர் வைத்திய சாகரம்-

இந்துப்பு, திப்பிலி,பீத ரோகிணி ஆகியவற்றை சமமாய் எடுத்து நந்தியாவட்டம் பூச்சாற்றில் அரைத்து கண்ணிலிட குருடன் கண்ணுக்கு அருந்ததி என்னும் நட்சத்திரம் தெரியும் என்று நந்திக்கு சிவன் கூறியுள்ளார்,என்பதே இதன் பொருள்.

இப்படி மிக உயர் தன்மையுள்ள இந்துப்பை சோற்றுப்பிற்கு பதிலாக உபயோகித்து வந்தால்,உடலிலுள்ள துர் நீர்கள் எல்லாம் நீங்கி உடல் நலம் பெறும்.காயசித்திக்கும்,பத்தியத்திற்கும்,காய கற்பத்திற்கும் ஏற்ற உப்பு இது.இதை உபயோகித்து,அயோடின் நஞ்சு கலந்த சோற்றுப்பை தவிர்த்து எல்லோரும் நலம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.