சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 14 )

stomachசர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 14 )

சர்க்கரை நோய் என்பது ஒரு நோயே அல்ல . அது நம் உடலின் சீரண சக்தியில் சிறு செயல் குறைபாடே தவிர ( DIS-ORDER ) வேறில்லை. இதனை சீரண சக்தியை சரி செய்வதன் மூலம் சரி செய்து விடலாம்.சரி சீரண சக்தியை எப்படி சரி செய்வது . நம் உடலின் சீரண உறுப்புக்களுக்கு ஓய்வு கொடுத்தல் (விரதம் இருத்தல் )நல்லது . அது நம் சீரண சக்தியை அதிகரிக்கும்.

மூன்று வேளையும் வேளா வேளைக்கு கடமையாக சாப்பிடாமல் , பசித்துப் புசி . அதாவது பசி எடுக்காமல் சாப்பிடாதீர்கள். சாப்பிட்டுவிட்டு உறங்காதீர்கள். நமது வயிற்றில் உள்ள ஜடராக்கினியை அவித்துவிடாமல் ,  உணவை பசித்தபின்  மெதுவாகவும் , அரை வயிற்றுக்கு உண்பதும் நல்லது . நம்  உணவை நம் வயிற்றிற்கு ஒத்துக் கொள்ளுமா என்றறிந்து உண்பது நல்லது.

நான் சாப்பிட்டவுடன் வயிறு நிறைய தண்ணீர் குடிப்பேன் என்கிறீர்களா எனில் உங்களுக்கு சீரண குறைபாடு வரும் . நான் சாப்பிட்டவுடன் வயிறு நிறைய சில்லென்ற குளிர் தண்ணீர் குடிப்பேன் என்கிறீர்களா எனில் உங்களுக்கு கண்டிப்பாக சீரண குறைபாடு வரும். நாம் சாப்பிடும் உணவை  சீரணிக்கும் , சீரண நீர்கள் நீங்கள் குடிக்கும் தண்ணீரினால் நீர்த்துப் போவதால் இது நேர்கிறது . குளிர் நீர் குடிக்கும் போது சீரண நீர்கள் செயல் இழந்தே போகின்றன. விளைவு அசீரணம்,நெஞ்செரிச்சல், பின் விளைவாக சர்க்கரை நோய்.

மேற்கண்ட செயல்களைத் தவிர்த்து சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து , நல்ல மிதமான சூட்டில் வெந்நீர் அருந்துவது , நம் குடலில் உள்ள வேதியியல் மாறுபாட்டுக்கு , துணை புரிவதுடன் சீரண நீர்களின் செயல் திறனை அதிகரிக்கிறது .கீழ்க்கண்ட காணொளிக் காட்சிகளை காணுங்கள்.

சர்க்கரை நோயை குணமாக்குவது என்பது ஒரு வாழ்நாள் பழக்கங்களில் ஏற்படும் பழக்க வழக்க மாற்றங்களால் நிகழ்த்தப்படுவதே ஆகும். மருந்துகள் நம் சீரண சக்தியை மேம்படுத்தவும், சர்க்கரை நோயால் பழுதாகி இருக்கும் உள்ளுறுப்புக்களை சரி செய்யவும் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.நாம் நம் உடலுக்கு தகாத , வேண்டாத காரியங்களை செய்யும் போது நம் உடல் தடுமாறும் தடுமாற்றமே சர்க்கரை நோய்.