மச்ச முனி தாது ஜீவ விருத்திச் சூரணம் (பாகம் 2)

natural

மச்ச முனி தாது ஜீவ விருத்திச் சூரணம்

பலரும் இந்த மச்ச முனி தாது ஜீவ விருத்திச் சூரணத்தை வெறும் விந்து உற்பத்திக்கும் ,ஆண்மைக்குறைவுக்குமான மருந்து என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவை சப்த தாதுக்கள் என்னும் எழு வகைத் தாதுக்களையும் சரிசெய்யும். அவைகளில் ஏற்படும் குறைபாட்டையும் சரி செய்வதோடு நம் உடலின் ஒட்டு மொத்த  உயிர்ச் சக்தியையும் அதிகரிக்கும்.எனவே சப்த தாதுக்கள் பற்றி மீண்டும் விளக்குகிறோம்.

சப்த தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்களைப் பற்றி தெளிவாகத் தெரிந்து தெளியுங்கள்.இவை சரியாக இருந்தால் உங்கள் உடலில் நோய்கள் என்பதே இல்லை.மது மேகம் எனபது சப்த தாதுக்களின் குறைவால்தான் நேருகிறது .அதாவது சர்க்கரை வியாதியால் தாதுக்கள் நலிந்து, உடலுறவு என்பது வெறும் மனதின் ஆசையுடன் நின்று விடுகிறது,உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை.

இந்த உடல் உறவில் இயலாமை காரணமாக பல குடும்பங்கள் விவாக ரத்து வரை செல்லுகின்றன.அதை இந்த தாது விருத்தி லேகியம் 48 நாட்களில் சரி செய்யும். பல கூடாத பழக்க வழக்கங்களால்  (கைப்பழக்கம் , அதீத உடலுறவு , பர ஸ்திரீகளுடன்  அதீத பழக்கத்தினால் வாங்கிய வெட்டையினால் ஏற்பட்ட உடல் பாதிப்பு )  உடல் ரீதியாக பாதிப்புற்றவர்களையும் இது விரைவில் குணமாக்கும்.

சப்த தாதுக்கள் ஏழு வகைத் தாதுக்கள்

1. சாரம்: சுரப்பிகள் சுரக்கும் நீர்கள். இந் நிண நீர்கள் உடலையும் மனதையும் செம்மையாக வைத்திருக்க சுரப்பது.
2. இரத்தம்: உடல்முழுவதும் சத்துக்களையும் , பிராண வாயுவை எடுத்துச் சென்று வழங்கி, கழிவுகளை திரும்ப எடுத்து வருவது. அறிவு, வன்மை, ஒலி, ஒளி இவற்றை உடலில் நிலைத்திருக்க செய்வது.
3. தசை: உடலுக்கு உருவத்தையும்,அழகையும் , சரியான வடிவையும் , உடலியக்கத்திற்கும் எலும்புக்கும் ஆதரவாகவும் உள்ளது.
4.கொழுப்பு:உறுப்புக்களுக்கு சக்தியை வழங்கும் மிகு சேமிப்பு கிடங்கு இது,ஒரு வாரம் வரை உணவு வழங்கப்படாமல் இருந்தாலும் தான் கரைந்து  உடலை நன்றாக அப்படியே வாடாமல் பார்த்துக் கொள்ளும். ஒவ்வொரு உறுப்பும் தத்தம் வேலையை செய்யும்பொழுது சுலபமாக இயங்க அவற்றிற்கு நெய்ப்பசை ஊட்டி உதவுகின்றது.
5. எலும்பு: உடலை கட்டாக நிறுத்தி வைப்பது இந்த  எலும்புச் சட்டகம் தான் மென்மையான உறுப்புகளை பாதுகாத்தல் உடல் அசைவிற்கு அடிப்படையாக விளங்குதல் முதலிய செய்கைகளை செய்வது.
6. மஜ்ஜை: எலும்புக்குள் நிறைந்த இவைகள் இரத்தச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது , மற்றும் எலும்பை வளப்படுத்துவது ,அதன் மூலம் உடலை பாதுகாக்க செய்வது.
7. சுக்கிலம்/சுரோணிதம்: கருத் தோற்றத்திற்கு முக்கியமாக இருந்து உடலுக்கு வன்மையை தருவது.ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையைத் தீர்மானிப்பதும் , பெண்களுக்கு கரு முட்டையைத் தோற்றுவித்தலைத் தீர்மானிப்பதும் இந்தத் தாதுவே. ஆண்களுக்கு ஆண்மையையும் , பெண்களுக்கு பெண்மைத் தன்மையையும் தருவது இதுவே.
ஆண்பாகத்தில் கலை 3 ஆணிடத்தில் ஆகாசம், பிரகிருதி, ஆன்மவுணர்ச்சி – இம்மூன்றும் ஒருமித்துச் சுக்கிலமாய், அறிவு சத்தி வித்து என்னும் பாகத்தோடு தடித்து ஓர் மணியாம்,பெண்பாகத்தில் கலை 4 , பெண்ணிடத்தில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு என்னும் சூரியன், சந்திரன், அக்கினி, இயமன் என்னும் உயிர் ஆக நான்கும் சேர்ந்து சுரோணித மாயிற்று., ஆகக் கலை 7. ஒவ்வொரு கலையில் ஒவ்வொரு தாது அணுவாய்ச் சேர்ந்து 7-வது கலையில் கரு சம்பூரணமாய்ச் சப்த தாதுக்களும் கூடியபின் பிண்டமாகும் அதாவது உடலாகும்.
சூரியன் தலை, சந்திரன் நுரையீரல்& சிறு நீரகம் , செவ்வாய் எலும்பு மஜ்ஜை & ரத்தம், குரு என்ற வியாழன் என்ற தேவ குரு இதயம் &வயிறு, சனி  நரம்புகள்,புதன் அண்டம்& தோல் ,சுக்கிரன் என்ற அசுர குரு சஞ்சீவினி வித்தை {இறந்தவரை உயிர்ப்பிக்கும் வித்தை}தெரிந்த அசுர குரு  இனப் பெருக்க உறுப்புகளைப் பார்த்துக் கொள்ளுகிறார்.எனெனில் இறக்கும் முன் பல உயிர்களுக்கு உடலை  மனித உடலில் உருவாக்கி உயிர் பிறக்கக் காரணமாகிறார் அல்லவா????
நவ கிரகங்களில் ராகுவும் , கேதுவும் நிழல்களே , அவை தவிர மற்ற ஏழு கிரகங்களும்தான் சப்த தாதுக்களுடன் தொடர்புடையவை . இப்படி சப்த தாதுக்களும் சப்த கிரகங்களுடன் தொடர்பு கொண்டவை யாதலால்  இந்த சப்த தாதுக்களை சரி செய்தால் சப்த கிரகங்களும் சரியாகும். இவை ஒவ்வொன்றிற்கும் உள்ள மூலிகைகளைச் சேர்ப்பதால் உடலும் மனமும் , வாழ்வும் சரியாகும்.நமது ஜாதகம் , நமக்குச் சாதகமாகத் திரும்பும்.
உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த தாது விருத்தி சூரணத்தில் பல முக்கிய  மருந்துப் பொருட்கள் கலந்து இருக்கின்றன அவை உடலில்  நலம் புரிவதோடு பல உடல் கோளாறுகளையும் போக்கி அருள்கிறது.