வாலாம்பிகை (சித்தர்களின் தெய்வம்)

வாலாம்பிகை

vaalaiamman

வாலாம்பிகை பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக இருந்து வந்தது.இவள் சித்தர்களுக்கு முழு முதற்கடவுள்.இவளைக் கொண்டே அறுபத்து நாலு கலைகளையும் சித்தர்கள் அறிந்தனர். இவளை திரிபுரை என்றும் , வாலை என்றும் ,பத்து வயதாளென்றும், பதினாறு வயதாள் என்றும், கன்னியென்றும்,பச்சைநிறத்தாளென்றும் ,சக்கரத்தாளென்றும் , வாமியென்றும் ,தேவியென்றும், மாயையென்றும்,புவனையென்றும்,அன்னையென்றும், ஆவுடையாளென்றும், தாரையென்றும் , அமுதக் கலசமென்றும்,தாயென்றும் உண்ணாமுலையென்றும் ,கோவுடையாளென்றும் , அண்ட பேரண்டங்களைக் கட்டிக் காக்கின்ற அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்றும் அழைப்பார்கள். வைத்தீஸ்வரனான ஈஸ்வரனே இவள் தயவில்தான் மண்ணையே மருந்தாகக் கொண்டு வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியம் புரிந்து வருகிறான்.இவளை அறிய ஏழு பிறப்பில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள் சித்தர்கள். இவளால் தர இயலாதது எதுவும் இல்லை. இவளைப் பூசை செய்யும் செய்யும் முறையைப் பற்றி சட்டை முனி கூறுவதைப் பாருங்கள்.

சட்டை முனி ஞானம் -4

பூசை செய்யும் முறை

காணப்பா பூசை செய்யும் முறையைக் கேளாய்

கைம்முறையாய்ச் சுவடி வைத்துப் பூசை செய்வார்

பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்து

புகழாக பூசை செய்வார் பெண்ணை வைத்தும்

நாளப்பா சக்கரத்தை பூசை செய்வார்

நம்முடைய பூசையென்ன மேருப் போலே

ஓதப்பா நாற்பத்து முக்கோணம் வைத்தே

உத்தமனே பூசை செய்வார் சித்தர்தானே!

பாடல் (1)

தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்

சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்

தேனென்ற மேருவுக்கு தீட்சை வேண்டும்

சிறுபிள்ளையாமொருவன் தீண்டப் போகா

வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்

வாய்திறந்தே உபதேசம் சொன்னாராகில்

கோனென்ற வாத சித்தி கவன சித்தி

கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே!

பாடல் (2)

கூறியதோர் வாலையின் மூன்றெழுத்தைக் கேளாய்

குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய்

மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்

மைந்தனே இவளை நீ பூசைபண்ண

தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்

திறமாக புவனையை நீ பூசை பண்ணு

ஆறியதோர் யாமளை யாறெழுத்தைக் கேளாய்

அவளுடைய பதம் போற்றி பூசை பண்ணே!

பாடல் (3)

பண்ணிய பின் யாமளையை ஐந்தெழுத்தைக்  கேளாய்

பண்பாக தீட்சையைந்தும் முடிந்தபின்பு

வன்னியதோர் வாசியென்ற யோகத்துக்கு

மைந்தனே வைத்துப் பிராயாமந் தீரும்

கன்னியதோர் இத்தனையு மறிந்திருந்தாற்

காயசித்தி விக்ககினங்கள் இல்லை யில்லை

உன்னியதோர் உலகமென்ன சித்தரென்ன

உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே!

பாடல் (4)

சிலர் தீபம் வைத்து பூசை செய்வார்கள் . சிலர் இந்த வாலைப் பெண்ணை வைத்து பூசை செய்வார்கள் . சிலர் சக்கரத்தை வைத்து பூசை செய்வார்கள் .சிலர் மகா மேருவை வைத்து பூசை செய்வார்கள் .சித்தர்கள் நாற்பத்து முக்கோண சக்கரத்தை வைத்து பூசை செய்வார்கள் சித்தர்கள் .

மேருவைப் பூசிக்கின்றவர்கள் சாபமிட்டால் அண்டரண்டமெல்லாம் தீயாய்ப் பிடித்து வேகும். இதற்கு தீட்சை அவசியம் வேண்டும் . சிறுபிள்ளைபோல எண்ணி யாரும் இதைத் தொடல் ஆகாது.வான் தத்துவமாகிய இந்த மேரு பூஜை செய்கிறவர்கள் வாயைத் திறந்து யாருக்காகிலும் உபதேசம் ( இரு தேசங்களைப் பற்றிய ரகசியங்களை) சொல்ல முற்படுவரானால் , அவர்களுக்கு ஞான , யோக, வாத ரகசியங்கள் எல்லாம் வசப்படும்.

வாலையின் மூன்றெழுத்தான அகார , உகார , மகாரத்தின் குறி எது என்றுணர்ந்து பூசை செய்வாய்.திரிபுரையின் எட்டெழுத்தை (தமிழில் எட்டுக்கு அ என்பதே குறி) புரிந்து பூசை செய்வாய்.எட்டும் இரண்டுமாகிய ( இரண்டுக்கு தமிழில் உ என்பதே குறி ) இதை உணர்ந்தால் வாலைத்தாயின் இருப்பிடம் தெரியும் .அவள் அருள் உனக்குக் கிடைக்கும். யாமளையாகிய அவளின் ஆறெழுத்தையும் நீ உணர்ந்து பூசை செய்வாய்.

ஐந்தெழுத்தாகிய பஞ்ச பூதங்களின் உறைவிடத்தைக் காண்பாய் . இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை அறிந்த பின், வாசியை உணர்ந்து கொள்.இதில் வகாரமான காற்றையும் , சிகாரமான நெருப்பையும் உணர்ந்து ( இதையே நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும் என்கிறார் திருமூலர். நாயை எப்படி ஓட்டுகிறோம் , சி என்றல்லவா?இந்த சிகாரமான நெருப்பு யமனை வெல்லும். ) வகாரமான காற்றையும் சிகாரமான நெருப்பையும் சரியாக வைத்துக் கொள்ளாமல் இறந்துவிட்டான் என்பதால்தான் , இறந்து போனவனின் எலும்பில் பாலூற்றும் போது காசி ,காசி என்று ஊற்றுகிறார்கள். அவன் இவற்றை சரியாக பராமரிக்காமல் இறந்து போனான் ,உயிரோடிக்கும் நீயாவது இறக்காமல் இருந்து கொள் என்றுணர்த்தவே சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன . இறந்தவனை கொண்டு போகும் போது  உறுமி மேளம் அடிப்பார்கள் , அது உண்டுண்டு என்றடிக்கப்படும் . அதாவது இந்த மரணம் உனக்கும் உண்டு , உனக்கும் உண்டு என்று உணர்த்தவே ஆகும் .

உத்தமனே முந்தைய பிறவிகளில் இந்த வாலையைத் தியானித்திருந்து அரைகுறையாக விட்டிருந்தால் , அந்த விட்ட குறை , அந்தப் புண்ணியம் இந்தப் பிறவியில் தொடர்ந்து வந்து ஞானத்தைத் தந்தே தீரும் . இதை அந்த வாலைத் தாய் மரணமில்லாப் பெருவாழ்வை  நிறைவேற்றித் தருவாள்.

பட்டினத்தார் ஞானம் -100

நெஞ்சமுடனே தாம்புலம்பி நீலநிறத் தாளீன்ற

குஞ்சரத்தை யாதரித்து கும்பிட்டால்- தஞ்சமுடன்

காமமுதல் மும்மலத்தின் கட்டறுத்து ஞானமுடன்

பூமிதனில் வாழ்வரெ ப்போதும்

பாடல் (1)

ஆவுடையாளொடிருந்தேன் அருளானந்தம் பெறவே

கோவுடையாள் நின்றதினம் கூடிய – பூவுடையாள்

கட்டழகியைத்தான் கடந்து பெருவெளியில்

இட்டமுடன் நெஞ்சே இரு

(பாடல் 4)

நெஞ்சமுடன் தாம்புலம்பி , நீலநிறத்தாள் ஈன்ற குஞ்சான அகார , உகாரத்தைக் கும்பிட்டால் , நம்மைத் தஞ்சமடைந்திருக்கின்ற காமம் முதலான மும்மலத்தின் கட்டறுந்து ஞானத்துடன் பூமியில் வாழ்ந்திடுவார்கள் எப்போதும்.

பட்டினத்தார் ஆவுடையாளோடிருந்தேனென்றும் (வாலைத் தாயுடன் இருந்தேன் ) , அவளுடைய அருளானந்தம் பெற்று , பூவுடையாள் கட்டழகியைத்தான் கடந்து , வேதாந்தப் பெருவெளிக்குள்   இட்டமுடன் நெஞ்சே இரு என நெஞ்சுக்கு கட்டளை இடுகிறார்.

இந்த வாமியான வாலையைக் கனவினில்  கண்ட காட்சியையும் , அவளிடம் கேட்ட வரம் பற்றி பாரதியார் தனது பாடலில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்


மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்!

மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்!

வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை!

வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை!

பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும்,

பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும்,

புன்னகையின் புதுநிலவும்  போற்ற வரும் தோற்றம்!

புன்னகையின் புதுநிலவும்  போற்ற வரும் தோற்றம்!

மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்!

மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்!

துங்க மணி மின்போலும் வடிவத்தாள் வந்து,

துங்க மணி மின்போலும் வடிவத்தாள் வந்து,

தூங்காதே எழுந்தென்னை பாரென்று சொன்னாள்!

தூங்காதே எழுந்தென்னை பாரென்று சொன்னாள்!

அங்கதனில் கண்விழித்தேன் !அடடா ஓ அடடா!

அங்கதனில் கண்விழித்தேன் !அடடா ஓ அடடா!

அழகென்னும் தெய்வம் அதுவென்றேயறிந்தேன்!

அழகென்னும் தெய்வம் அதுவென்றேயறிந்தேன்!

மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்!

மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்!

காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோவென்றேன்?

காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோவென்றேன்?

காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்!

காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்!

ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ வென்றேன் ?

ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ வென்றேன் ?

நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்!

நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்!

மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்!

மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்!

– பாரதியார் –

முதலில் அந்த வாலாம்பிகையின் காட்சியை வருணித்த பாரதியார் , வாலாம்பிகையிடம் காலத்தின் விதி தமது மதியைக் கடந்திடுமோவென்று கேட்கிறார்.அதற்கு வாலாம்பிகை காலமே மதியினுக்கு ஓர் கருவி என்று கூறுகிறாள். இந்த உலகத்தில் விரும்பியது கிடைக்குமா என்று வினவுகிறார் பாரதி , அதற்கு வாலைப் பெண்ணாத்தாள் , நாலில் ஒன்றிரண்டு கிடைக்கலாம் என்றாள்.

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் – வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்.

ஏழு சுரங்களுக்குள் பாடல் மட்டுமல்ல நாம் பேசும் அனைத்துமே அடக்கம். சப்த சுரங்களுக்குள் அடங்குவதால்தான் அதற்கு சப்தம் என்றே பெயர்.  ஞானத் தத்துவ விளக்கம் இதில் இருப்பதால்இந்தப் பாடல் எமக்குபிடித்த பாடல்.இதயத்தில் நம்முள் எழும் கேள்விகளால்தாம் ஞானம் பிறக்கிறது . அறிவு விசாலமடைகிறது . காணும் மனிதர்களில் எத்தனை சலனம் . இந்த சலனம் இருப்பதால்தான் இந்த உலக இயக்கம் நடக்கிறது . இந்த உலக இயக்கம்  நடக்கவே இயற்கை சக்தியாகிய அன்னை மாயாவைப் படைத்து நம்மை இயக்கி வைக்கிறாள் .

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் – மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி இன்று என்ன கிடைக்கும் , என்ன நடக்கும் , கிடைப்பது கிடைத்த பின்னும் ஆவி துடிக்கிறது . மேலும் என்ன கிடைக்கும் .இதைவிட சிறப்பாக இன்னும் ஏதேனும் கிடைக்குமா ? என்று இந்த ஆவி தினம் பரதவிக்கின்றது. இவை ஏதும் நமக்கு நிலைக்காது என்று தெரிந்தும் துடிக்கிறது. காலை எழுந்தவுடன் நமக்கு வேலை ஒன்றும் இல்லை எனில் நாம் ஞானியாகிவிட்டோம் என்று பொருள் . ஏனெனில் செய்யும் அனைத்தும் வீணே . இறப்பு நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது  .அதைத் தடுக்கும் வழி நோக்காமல் வெட்டி ,வீண் வேலைகளை செய்து உழன்று கொண்டிருக்கின்றோமே ? ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் . இவையெல்லாம் எதற்குச் செய்கிறோம்? என்ற கேள்விக்கு விடை தெரிந்தால் செய்வோமா ? மனிதன் இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் . ஏன் செய்தோம் என்ற கேள்விதான் மிஞ்சும்.

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

எனக்காக நான் சாப்பிட்டால் மட்டுமே என் பசி போகும் . அது போல பூமியில் நமக்காக நம் கடமைகளை நாம் மட்டுமே செய்தாக வேண்டும் . நாம் இறைவனை அடைய நாம் மட்டுமே பாடுபடவேண்டும் . மற்றவர் நமக்காக இறைவனை பிரார்த்திக்க முடியாது . இறைவன் நமக்கு அப்பா . அந்த அப்பனிடம் நாம் கேட்டாலே கிடைக்குமல்லவா? இதற்கென்று வேறு ஒரு இடைத் தரகர் எதற்கு . இதையேதான் நமக்காக நம் கையால் செய்வது நன்று என்று கூறுகிறார்.  

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் – அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்.

ஆரம்பத்தில் பிறப்பு மட்டுமல்ல இறப்பும் நம் கையில் இல்லை. வந்ததுவும் தனியே போவதும் தனிமையிலேயே . இதில் இடையில் வரும் சுற்றமும் நட்பும் வெறும் சந்தைக் கூட்டம் போல சந்தை முடிந்ததும் கலைந்துவிடும் . இதில் எந்த நடப்பும் நம் கையில் இல்லை . நாம் செய்தோம் என்று பெருமைப்பட ஒன்றுமே இல்லை . இருவர் செய்யும் காரியங்கள் ஒன்றாக இருந்தாலும் பலன் வேறு வேறாக இருக்கிறது .எனவே பலனைக் கொடுப்பவன் யாரென்று உணர்ந்து கொள்ளல் வேண்டும் . நாம் ஒரு பொம்மை நம்மை ஆட்டுவிக்கும் கயிறு இறைவனிடம் உள்ளது . இதை நாம் சீக்கிரம் உணர்ந்து கயிற்றைப் பிடித்து இருக்கும் இறையை உணர வேண்டும் .அந்தக் கயிறோ சூத்திரப் பாவையின் கயிறு போல கண்ணுக்குப் புலப்படாக் கயிறு .

இதையே குணங்குடி மஸ்தான் சாகிபு பாடலில் கூறுகிறார்.

சூத்திரப்பாவை கயிறற்று வீழுமுன் சூட்சுமக் கயிற்றைப் பாரடா!

அதி சூட்சுமக் கயிற்றைப் பாரடா!

இந்தப் பாதையை வகுத்தது இறைவன் . நாம் இங்கே பிறக்கு முன்னே நாம் இருக்க , சுகமான மண் , அதில் இருக்க வீடு , சுவாசிக்க காற்று , நம்மைக் காக்க ஒரு தாய் , தந்தை , சுற்றம் என ஏற்படுத்தி வைத்த இறைவன் இருக்க எனக்கு பிறவி எடுக்க என்ன கஷ்டம் . எத்தனை பிறவி எடுத்தாலும் இத்தனையும் உண்டாக்கி வைத்த இறைவா உன்னை மறவாதிருக்க வேண்டும் என அவ்வை இறைவனை வேண்டுகிறாள் . இறைவன் வகுத்துக் கொடுத்த பாதையில் நாம் செல்வோம் . நடத்துவது அவன் என்ற நினைப்புடன் . நம் பாவம் நம்மை விட்டு மறைந்தேவிடும் . எவ்வளவு எளிதாக இறை பக்தியை சொல்லிவிட்டார்கள்.

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

நாளைப் பொழுது என்றும் நமக்கானது என்றே வாழ்வோம் .அதை நடத்த ஒருவன் உண்டு என்பதை நமது உள்ளக் கோயிலில் காண்போம்.

இதையேதான் திருமூலர் “ உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பாலயம் “ என்று கூறுகிறார் . என்றும் நல்ல வேளை பிறக்கும் என்றே நம்பிக்கை கொள்ளுங்கள் . கலைகின்ற மேகங்களைப் போல எந்த வேதனையும் மாறும் .

கேள்வியின் நாயகனென  நாம் இருக்கிறோம் . ஆனால் இறைவன் கேள்விகளுக்கெல்லாம் விடைகளுக்கும் மேலாக வீற்றிருக்கின்றான். ஆம் இறைவனான சிவன் அமர்ந்திருக்கும் மாட்டிற்குப் பெயர்  விடை ! இதையேதான் சம்பந்தர் தனது பாடலில் “தோடுடைய செவியன் விடை ஏறியோன்” என்று கூறுகிறார்.

இல்லாத மேடையொன்றில் எழுதாத நாடகத்தைத்தான் நாம் நடித்துக் கொண்டிருக்கிறோம் . இறை என்னும் அளப்பில்லாத சக்தியிடம் , ராஜாவாக இருந்த , நம் உண்மைத் தகப்பனான இறையை மறந்து , நம்மிடம் உறைந்துள்ள இறைச் சக்தியை மறந்து பிச்சைக்காரனென உழலும் விந்தை என்ன விந்தை.பிச்சைக்கார வேஷமிட வந்த நாம் பிச்சைக்காரனாகவே மாறியது என்ன விந்தை ? இந்த விந்தை நாடகத்தை  நாமே நடிக்கின்றோம் , நாமே எல்லோரும் பார்க்கின்றோம்.

சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் , கொஞ்சம் சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம். நமக்கு பொய் முகங்கள் பல .ஒன்றை எடுத்தால் இன்னொரு பொய் முகம் என இதற்கு முடிவில்லாமல் இருகிறது .

திருச்சானூரில் இருக்கும் அலர்மேல் மங்கைத் தாயார் எப்போது திருமலைக்குச் செல்வது .  திருமலை என்பதும் , ஏழு மலை என்பதும் ஏழு திரைகள் போட்டு வைத்திருக்கும் அறுத்தடைத்த  வாசலாக்கிய பத்தாம் வாசல். நம் உடல் நவ துவாரங்களாலான ஒன்பது வாசலைக் கொண்டது . இந்தப் பத்தாம் வாசலைத் திறப்பதுவேதான் வைகுண்ட ஏகாதசி .

வையகத்தில் உள்ள குந்தம் இது எனவே வைகுந்தம் எனப்படுகிறது .  தச வாயுக்களால் இந்த பத்தாம் வாசலை முட்டித் திறப்பதுவே வைகுண்ட ஏகாதசி . இதையேதான் கந்த சஷ்டி கவசத்தில் குத்து குத்து கூர்வடிவேலால் ,முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட ,  செக்கு செக்கு செதிற்செதிலாக , சொக்கு சொக்கு சூற்பகைச் சொக்கு என்று கூறுகிறார் .

பிடிவாதமாக இருக்கும் நம் உடலில் காற்று. (பிடி + வாதம்) வாதம் என்றால் காற்று , பிடி என்றால் பிடித்தல் . காற்றைப் பிடிக்கும் கணக்கை அறிந்தால் கூற்றை உதைக்கும் குறியதுவாமே ? மாணிக்க வாசகருக்கு திருவாதவூரர் என்று பெயர்  . திரு என்ற கடவுள் நின்ற ஊரான நம் உடலே திரு வாத வூர் . இந்த திரு வாதவூரில் இருக்கும் நெருப்பையும் காற்றையும் தக்க அளவில் வைத்து மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வோம்.

இதையே அகத்தியர்

உண்ணும் போது உயிரெழுத்தை உயரே வாங்கு

உறங்குகின்ற போதெல்லாம் அதுவேயாகும்.

பெண்ணின்பால் இந்திரியம் விடும்போதெல்லாம்

பேணி வளம் மேல்தூக்கி அவத்தில் நில்லு

தின்னும் காய் இலை மருந்து இதுவே ஆகும்.

தினந்தோறும் இப்படியே செலுத்த வல்லார்

மண்ணூழி காலம் மட்டும் வாழ்வார்தாமே!

மறலி கையில் அகப்படவும் மாட்டார்தாமே!

-அகத்தியர்-