இரங்கும் மனமுடையவர்களின் பார்வைக்கு ( கல்விக்கு ஒரு உதவி ) பாகம் 6

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. (குறள் 231)

விளக்கம் : ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு (01)
ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
பரிமேலழகர் உரை
ஈதல்= வறியார்க்கு ஈக; இசைபட வாழ்தல்= அதனால் புகழ் உண்டாக வாழ்க; அது அல்லது ஊதியம் உயிர்க்கு இல்லை=
அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப் பயன் பிறிது ஒன்று இல்லை ஆகலான்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
இசைபட (புகழுடன் )  வாழ்வதற்குக் கல்வி, ஆண்மை முதலிய காரணங்களும் உளவேனும், “உணவின் பிண்டம் உண்டி முதற்று” (புறநானூறு, 18) ஆகலின், ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக ஈதல் என்றார். உயிர்க்கு என்பது, பொதுப்படக் கூறினாரேனும் விலங்கு உயிர்கட்கு ஏலாமையின் மக்களுயிர்மேல் நின்றது.

அதாவது உயிருக்கு ஊதியமாவது ஏழைகளுக்கு கொடுத்தலும் , அதனால்  புகழுண்டாகி வாழ்வதும்தான் உயிருக்கு நாம் கொடுக்கும் ஊதியம் (சம்பளம் ) . ஊதியமில்லாத (சம்பளமில்லாத ) வேலைக்காரன் என்றும் வேலைக்கு  இருக்க மாட்டான் . அது போல  ஊதியமில்லாத (சம்பளமில்லாத ) உயிர் உடலுடன் ஒட்டி இருக்காது .

நாம் நம் உடலுக்கும் வாழ்வுக்கும் ஊதியமாக பணத்தைத் தேடுகிறோம்  . அதன் மூலம் நமக்கு நம் வாழ்விற்கு தேவையான அனைத்தையும் வாங்கி உடலால் அனுபவிக்கின்றோம் . ஆனால் உயிருக்கு என்ன தேவை  என்று நாம் எண்ணுவதில்லை . அதைத் தேடுவதும் இல்லை .ஒரு நாள் உடலுக்கு தேவையானவற்றை எல்லாம்  தேடித் தந்த உயிர் ,  தனக்கு ஊதியம் தராத உடலை விட்டு பிரிந்தது பறந்து தனக்கு  ஊதியம் தரும் உடலை நாடி அடுத்த பிறவி எடுக்க ஓடுகிறது .

இப்படி பிறவி தோறும் பிறந்து இளைக்கிறது உயிர். நாம் அந்த உயிரின் ஓலத்தை கண்டு கொள்வதே இல்லை.ஆனால்  பலர் இந்த உயிரின் ஆசையை நிறைவேற்றுகிறார்கள்.ஆனால் அதற்கு பணம் வேண்டுமே என்பர் பலர் .ஆனால் அதுவல்ல வேண்டியது மனம் மட்டுமே !!!!!

ஒரு முறை தருமன் செய்த ராஜ சூய யாகத்தின் முடிவில் தேவர்களுக்கு அவிர்ப்பாகம் கொடுத்ததன்  பின்னர் பலரும் தருமனுடைய யாகத்தைப் புகழ்ந்தனர் . அப்போது பாதியுடல் பொன் வண்ணமான கீரி ஒன்று அங்கு வந்தது . அந்த யாகசாலையில் புரண்டு எழுந்துவிட்டு சொன்னது ” தருமா ஒரு ஏழைப் பிராமணன் ஒரு முறை தான் சம்பாதித்து கொண்டு வந்த மாவை தனது  குடும்பத்துக்கு கொண்டு வந்து கொடுத்தான் . ஒரு  பசித்த வழிப் போக்கன் கடும் பசியாக இருப்பதாக ஏழைப் பிராமணன் வீட்டில் யாசகம் கேட்டான். உடனே பிராமணனுடைய இல்லாள்  மாவை  நான்கு பங்காக்கி ஒன்று  தனக்கும் , மற்றொன்றை தன் குமாரத்திக்கும் , மூன்றாம் ஒன்றை தன் கணவனுக்கும் , நான்காம் ஒன்றை யாசகனுக்கும் எடுத்து  வைத்தாள் . முதல் பங்கை  யாசகனுக்கு  கொடுத்தார்கள் , யாசகனுடைய பசி தீராது மேலும் உணவு வேண்டினான். அடுத்து  மனைவி தனது பாகத்தை கொடுத்தாள் . அப்போதும் யாசகனுடைய பசி தீராது மேலும் உணவு வேண்டினான்.அடுத்து  மகள் தனது பாகத்தை கொடுத்தாள் . யாசகன் தனது பசி தீர்ந்து வாழ்த்தினான் . தேவ லோகத்தில் இருந்தது புஷ்பக விமானம் வந்து  அந்த பிராமணனது  குடும்பத்தை  ஏற்றிக் கொண்டு சுவர்க்கம் சென்றது .அந்த மாவு தானத்தின் போது சிதறிய மாவின் மீது புரண்டெழுந்தபோது எனது உடல் பாதி பொன்னானது . மீதி உடலும் பொன்னாக நானும் எங்கெல்லாம் தான , தருமங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் போய் நானும் புரண்டு எழுந்து வருகிறேன் . ஆனால் எனது உடல் இன்னும் பொன்னாகவில்லை . உனது பல லட்சம் பொன் செலவழித்து பலருக்கு தானம் செய்த யாகம் என்னுடலை பொன்னாக்கவில்லை . எனவே உன்னுடைய யாகம் அந்த பிராமணனது உணவுத் தியாகத்தினால் செய்த தானத்திற்கு எள்முனையளவு கூட ஈடாகாது என்று சொன்னது .அதைக் கேட்ட தருமனின் ஆணவம் அழிந்தொழிந்தது .

எனவே தானம் என்பது பொருளின் அளவையும் ,மதிப்பையும் வைத்துக் கிடையாது .தனக்குப் போகத் தானம் என்றெண்ணாமல் , யாசகன் தேவைக்கு ஏற்றார்போல்  தனது  பொருளின் முழு அளவையும் , முழு மனதோடு கொடுப்பதுதான்  தானத்தின் அளவை நிர்ணயம் செய்கிறது.

போன வருடம் 14 – 06 – 2013  அன்று திரு சின்னக்குஞ்சு என்பவர் அவருடைய பையனுடைய (சி . ரஞ்சித் ) என்ற பையனுக்கு அவரால் கடைசி வருடப் படிப்பிற்கு பணம் கட்ட முடியாமல் திணறிக் கொண்டு இருந்தார் . அவர் எனது நண்பர் ஒருவருடைய வீட்டிற்கு வந்து மருந்துகள் செய்ய உதவ  வந்து இருந்த போது ,  அவரிடம் உதவி கேட்டுக் கொண்டிருந்தார் . அப்போது அங்கு நான் இருந்தேன் . எனக்கு திரு ஆனந்தவேல் கண்ணன் அவர்கள்தான் , ஞாபகம் வந்தது . அவர்  மிகச் சிறந்த இரங்கும்  மனம் உடையவர்.அவருக்கு ஒருவருக்கு மட்டுமே மின்னஞ்சல் செய்தேன் . அந்தப் பையனது அந்தப் பையனது படிப்புக்கு தேவையான ரூபாய் இருபத்தைந்தாயிரத்தையும்  18 – 06 – 2013 அன்றுக்குள் திரு ஆனந்த வேல் கண்ணன் ஒருவரே அனுப்பி வைத்தார் . அவர் சென்ற இரங்கும் மனமுடையவர்களின் பார்வைக்கு(கல்விக்கு ஒரு உதவி)பாகம் 5 பதிவில் கேட்டிருந்த உதவிக்கு  பணம் ரூ நாற்பதாயிரம் உதவி செய்ததோடு இந்த உதவியும் செய்துள்ளார்.நமது மச்ச முனிவரது சித்த ஞான சபை இணைய தளம் இயங்க ஒரு வருடத்திற்காக ,  உள்ள கட்டணத்தையும் அவரே செலுத்தியுள்ளார். அவரது கொடைத் தன்மை மிகவும் மெச்சத் தகுந்தது.

சி . ரஞ்சித் அவர்களுடைய  விவரங்களை கொடுத்துள்ளோம் .

c.ranjithUntitled picture(1)

 

 

 

 

 

 

 

Untitled picturedffd

எமது நண்பர் திரு ஜவஹர்லால் என்பவர் எம்முடன் பணி புரிந்து சென்ற நான்கு  வருடங்களுக்கு முன்னால் இறைவனடி சேர்ந்துவிட்டார். அவருடைய அந்திம காலத்தில் அவருக்கு செய்த மருத்துவச் செலவுக் கடன்களை அடைக்கவே அவரது இறுதிப் பணிக்கொடையும் , தொழிலாளர் சேம நலநிதி சேமிப்பும்  உதவின.

அவருடைய புதல்வர்களில் இருவர் தற்போது பள்ளிப் படிப்பில் உள்ளார்கள் .தற்போது அந்தப் பையன்களின் படிப்புக்கு பணம் கட்ட முடியாத,  வழியில்லாத  நிலையில் உள்ளார்கள். ’’அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டலின் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது என்பது  முன்னோர் வாக்கு.’’  அதற்கிணங்க பண உதவி புரிய எண்ணும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் அவர்களுடைய இந்த வருட மூன்றாவது வருட  தவணைப் பணம் கட்ட இந்த வருடம் 2014  மாதம் மே 15  ம் தேதி கடைசித் தேதி.

சென்ற முறை பணம் அனுப்பிய அன்புள்ளங்களுக்கு  அந்தப் பையன்களுடைய தாயார் நன்றி தெரிவிக்கும் காணொளிக்காட்சி கீழே  கொடுக்கப்பட்டுள்ளது .

இந்த முறை பகுதிக் கட்டணமாக அவரது இரு பையன்களுக்கும் ரூ 8௦, ௦௦௦ /= பணம் கட்ட வேண்டி உள்ளதால் அன்புள்ளம் கொண்டவர்கள் கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கணக்கு எண், எனது மகளின் SBI வங்கி கணக்கு எண்ணை கீழே கொடுத்துள்ளேன்.பணமாய் (CASH DEPOSIT )  செலுத்துவதை இயன்ற வரை தவிர்க்கவும்.இயன்றவரை பணப் பரிமாற்றம் இணைய மாற்றத்தில் செலுத்தினால் அதற்கான கட்டணம் குறையும் .முடியாதவர்கள் பணமாய் (CASH DEPOSIT ) செலுத்தவும் .

SBI ACCOUNT HOLDER NAME:A.SRI LATHA.

S.B A/C NO:30807797084

A/C MAINTAING BRANCH:RAJAPALAYAM.626117

VIRUDHUNAGAR-DIST.TAMILNADU.INDIA.

IFS CODE :SBIN0000906