மச்சமுனி மூலிகையகம் (பாகம் 15 ) மச்சமுனி மூலிகை பற்பொடி

மச்சமுனி மூலிகை பற்பொடி

மச்சமுனி மூலிகை பற்பொடியில் சேர்க்கப்பட்டுள்ள முக்கிய சக்தி வாய்ந்த மூலிகை மருந்துகள்.

    1. அதிவிடயம் என்ற ஆனைக் கொம்பு
    2. மாசிக்காய்
    3. நாயுருவி ( அபமார்க்கி )
    4. பிஞ்சுகடுக்காய்
    5. கருவேலம்பட்டை
    6. ஆலம்விழுது
    7. கண்டங்கத்திரி
    8. புதினா
    9. கரிசாலை
    10. கிராம்பு
    11. ஆதாளை
    12. காய்ச்சுக்கட்டி
    13. படிகாரம்

என அற்புதமான மூலிகைகளின் சங்கமத்தில் உருவாகியுள்ள தரமான பற்பொடி இது.

நாயுருவி

மலிகாரங் கைப்புள்ள அபமார்க்கி யின்வேரால் வசியமுண்டாம

மிலைமூல வுதிரமந்தம் பேதிகபம் வியர்வுதந்தி யிறங்கு மேகம்

மலையேனும் படிபுரியு முள்ளரிசி பசி மாற்றும் வன்சமூலம்

பலமாதர்க் குள்ளழுக்கை நீக்கும்வங்க செந்தூரம் பண்ணுமாதோ

( பதார்த்த குண விளக்கம் )

குணம்:-கசப்பும் , கார்ப்புமுள்ள நாயுருவி வேரால் முக வசீகரமாகும் . நாயுருவி இலை இரத்த மூலம் , அதிசாரம் , கப நோய் , வியர்வை , தந்திப் பிரமேகம் , இவைகளை விலக்கும் .இதன் விதை பசியை நீக்கும் .இதன் சமூலத்தை சுட்டெரித்த சாம்பல் பிரசவித்த தாய்மார்களுக்கு உதிரச் சிக்கலை நீக்கும் . இவைகளுமல்லாமல் வங்கத்தை செந்தூரமாக்கும் .இதனைச் சேர்த்து பல் துலக்கி வர இலட்சுமி வசியம் உண்டாகும்.

ஆலும் , வேலும் பல்லுக்கு உறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி .

என்பது  நம் முன்னோர்களின் முது மொழி .அதற்கேற்ப ஆல விழுதும் , கருவேலம் பட்டையும் சேர்க்கப்பட்டுள்ளது.

கருவேலம்பட்டை

தந்த மிறுகுந் தனிச் சூதப் புண்ணாறு

மந்த சுரம் பித்தம் மடியுங்காண் – பந்த

மருவே யகலா மலரளக மாதே

கருவேலம் பட்டைக்குக் காண்

( பதார்த்த குண விளக்கம் )

கருவேலம் பட்டைக்கஷாயமிட்டு வாய் கொப்புளிக்க மருந்துகளின் வீறுகளால் ஏற்படும் வாய்ரணம் , ரச வேக்காடுகளால் முதலிய ரணங்களும், உந்தியின் கொதிப்பினால் வரும் வாய்ரணமும் , சுரமும் , பித்த நோயும் ,  பல்லீறுகளில் ஏற்படும் அழுகல் ,பல்லாட்டம் , முதலியவைகள் குணமாகும் .ஸ்திரீகள் பிரசவித்த பின்னர் அவர்களுக்கு அதிர்ச்சியினாலுண்டான  மர்மஸ்தான ரணங்களுக்கு மேலிட்டு அலம்பி வர ரணம் ஆறுவதுடன் , அந்த ஸ்தானமும் சுருக்கமடையும் .

ஆலம் பால்

ஆலம்பால் மேக மறுத்தசையும் பல்லிறுக்குங்

கோலமுடிக்குக் குளிர்ச்சி தரும் – ஞாலமதின்

மெத்தவுமே சுக்கிலத்தை விருத்தி செய்யுந் தப்பாமற்

சுத்த மதி முகத்தாய் சொல்.

( பதார்த்த குண விளக்கம் )

ஆலம் பால் ஆடும் பல்லை நிலை நிறுத்த வல்லது . முடிக்கு குளிர்ச்சியைத் தருவது. விந்தணுக்களின் எண்ணிக்கையை கூட்டும் , இன்னும் தாது புஷ்டியையும் உண்டாக்கும் .

காய்ச்சுக்கட்டி என்பது கருங்காலிக் கட்டையை பொடி செய்து கஷாயமாக ஆக்கி அதனைக் காய்ச்சி எடுப்பதனால் இந்தப் பெயர் .

காய்ச்சுக்கட்டி

தந்தமிறுகும் தனித்தவா யேதுவர்க்கும்

தொந்தமுறும் புண்ணும் தொலையுமே – வந்தகார்

பூச்சிக் குழாமிப் புனலிற்றான் சாகுங்கேள்

காய்ச்சுக்கட்டி தானருந்துங் கால்

( பதார்த்த குண விளக்கம் )

இதனைப் பற்பொடிகளில் கூட்டிப் பல் துலக்கப் பல்லீற்றினிலிருந்து சொரியும் இரத்தத்தை நிறுத்துவதுடன் , பல்லாட்டத்தையும் குணப்படுத்தும் . இதனை ஸ்திரீகளுக்குண்டாகும்  முலைக் காம்பிலுண்டாகும் வெடிப்புகளுக்கு தூவி வர விரைவில் ஆறும் . காய்ச்சுக்கட்டி – 2 1/2 வராகன் எடை , இலவங்கப்பட்டைச் சூரணம் 1/2 வராகன் எடை , இவைகளை ஒரு கோபையில் போட்டு 10 அவுன்ஸ்  கொதி நீரை விட்டு , வாய் மூடி , ஒரு மணி நேரஞ் சென்ற பின் வடிகட்டி , வேளைக்கு  3/ 4 –  1  அவுன்ஸ்  வீதம் கொடுத்து வர ஸ்திரீகளுக்கு காணும் பெரும்பாடு , வெள்ளை , சீதபேதி ,  கிராணி முதலியவைகள் குணமாகும் .

ஆதாளை என்பது நம்மை மாயமாய் மறைய வைக்கும் வல்லமை உள்ள மூலிகை.

அதன் பால் ஆடும் பல்லை நிலை நிறுத்த வல்லது  மட்டுமல்ல ஈறுகளின் வீக்கத்தையும் குறைத்து பல்லை முழு பலத்துடன் இறுக்கி வைக்கும்.

ஆதாளை

ஆதாளை 1_mini

வெண்ணெய் என்னும்  சித்தர் மெய்ப்பொருள்

வெண்ணெய் என்னும்  சித்தர் மெய்ப்பொருள்_miniஇந்த ஆதாளையுடன்  வழலை என்னும் தேனையும் , வெண்ணெய் என்னும்  சித்தர் பொருளையும் கலந்து ஆக்ஞா சக்கரத்தில் பொட்டிட உருவத்தை மாயமாய் மறையச் செய்யும் . கீழுள்ள இணைப்பை பாருங்கள்.

http://www.siththarkal.com/2012/08/karuvoorar.html

மிகச்சிறந்த மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த பற்பொடிவெறுமனே பற்பொடி என்ற எல்லைக்குள் அடங்காதது. வாய் துர்நாற்றம் முதல் பற்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடியது உள்ளுறுப்புக்களை காக்கும் நாக்கின் சுவையரும்புகளை போஷித்து அதன் மூலம் சுவையை உணரச் செய்து உடலின் உடலின் ராஜ கருவிகளை காக்கும் அளவுக்கு அருமையான மருந்தாகவும் விளங்குகிறது.

ஏனெனில் சுவைகளினால்தான் உடலின் ராஜகருவிகள் ( இதயம் , இதய உறை ,சிறு குடல் ,முக்குழி வெப்பப்பாதை , வயிறு , கல்லீரல் ,  நுரையீரல் ,  பெருங் குடல் , சிறு நீரகம் , சிறு நீர்ப்பை ,  பித்தப்பை , மண்ணீரல் , போன்ற  ) உள் உறுப்புக்கள் இயங்குவது சுவையால்தான் என்பதை அறிவீர்களா? சுவையை உணராத் தன்மையை உண்டாக்கும் நோயை சித்த மருத்துவத்தில் அருசி என்பார்கள் , சாப்பாட்டின் மீது விருப்பமின்மையை  அன்னத் துவேஷம் என்பர்.அருசி , மற்றும் அன்னத் துவேஷம் இவைதான் சர்க்கரை நோய்க்கு காரணங்கள் . இவற்றை அறவே விரட்டியடிக்கும் வல்லமை வாய்ந்தது நமது மச்சமுனி மூலிகை பற்பொடி  .

இந்த மச்சமுனி மூலிகை பற்பொடிக்கு  நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953