மச்சமுனி மூலிகையகம் (பாகம் 13 )அறுவகைச் சூரணம்

கீழ்க்கண்ட அறுவகைச் சூரணத்தை சாப்பிடும் போது முக்கியமாக லாகிரி வஸ்துக்களை அறவே தவிர்க்க வேண்டும்(லாகிரி வஸ்துக்களாவன காபி , டீ , மூக்குப் பொடி , புகையிலையுடன் கூடிய வெற்றிலை பாக்கு , பான் பராக் சிகரெட்டு , பீடி , மற்றும் சாராய வகைகள் ).ஏனெனில் இதில் சிவதை சேர்ந்துள்ளதால் இந்த மருந்தை சாப்பிடும் காலங்களில் இந்தக் கடும் எச்சரிக்கையை கடைப் பிடிக்குமாறு வேண்டுகிறோம். இதைக் கடைப்பிடிக்க இயலாதவர்கள் இதைச் சாப்பிட வேண்டாம் என்றும் வேண்டிக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

stomach

அறுவகைச் சூரணம்

1.சிவதை
2.மராட்டிமொக்கு
3.ஓமம்
4.சீரகம்
5.இந்துப்பு
6.நிலாவரை
இந்த அறுவகைச்சூரணம் வைத்திய ரத்தினம் வி.பலராமைய்யா அவர்களின் கைகண்ட மருந்தாகும்.
இரவில் படுக்கும் சமயம் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் சாப்பிட்டு வர மலச்சிக்கல், குடல்வாதம், ஆஸ்துமா நோயில் ஏற்படும் வயிற்று உப்புசம் அனைத்தும் குணமாகும். கழிவுகளின் பெருக்கமே நோய் என்றால், கழிவுகளை அகற்றுதலே முறையான சிகிச்சையாகும். அறுவகைச்சூரணம் கழிவுகளை அகற்றி நோய்களை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நோயற்ற வாழ்வையும் உத்திரவாதப்படுத்துகிறது.சிவதை மலம் கழிய வைக்கக் கூடியது. எனவே மலம் கழியும் பக்குவத்தை அறிந்து மருந்தின் அளவை கூட்டியோ, குறைத்தோ உபயோகிக்கவும்.

இந்த அறுவகைச் சூரணத்துக்கு  நீங்கள் நாட வேண்டிய மின்னஞ்சல் முகவரி

திரு அமீர் சுல்தான்.

மின்னஞ்சல்  :-

machamunimooligaiyagam@gmail.com

அலைபேசி எண் :- 9597239953