சித்த மருத்துவத்தின் சீரும் சிறப்பும் அல்லோபதி மருந்துகளால் வரும் நோய்களும்

சித்த மருத்துவத்தின் சீர் சிறப்பையும் , மருந்துகளால் வரும் நோய்கள் ,ஆசிரியர் திரு பஸ்லூர் ரஹ்மான் அவர்கள்.விளக்கமாக விவரித்துள்ளார்.அல்லோபதி மருந்துகளால் வரும் நோய்கள் மட்டுமல்ல , சித்த மருந்துகள் மற்றும் இயற்கை மருந்துகளின் பெருமையையும் விவரித்துள்ளார்கள் திரு பஸ்லூர் ரஹ்மான் அவர்கள்.பலர் அல்லோபதி வைத்தியத்தை வியாபாரமாக செய்து  கோடி கோடியாக சம்பாதிக்கும் வேளையில் , அந்த அல்லோபதி  மருத்துவத்தில் உள்ள ஒன்றுமில்லாத் தன்மையை விளக்கி , அதை வைத்து வியாபாரம் செய்யும் பல கம்பெனிகளையும் சாடியுள்ள அவருடைய இந்த தன்னலமற்ற தன்மையையும் , தெய்வீக சேவைக்கும் திரு பஸ்லூர் ரஹ்மான் அவர்களை நம் மச்ச முனி வலைத்தளம்  தலை வணங்குகிறது.

மக்கள் இதனால் விழிப்புணர்வு பெற்றால் அதுவே அவர்களுக்கு அல்லோபதி மருந்துகளால் வரும் நோய்களில் இருந்து விடுதலை. அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மருந்துக் கம்பெனிகளின் தங்களின் பணத்தால் , அல்லோபதி மருத்துவர்களை அவர்களின்  கைப்பாவைகளாக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தன்மையையும் , இந்த அல்லோபதி மருந்து மாபியா கும்பலுக்கு பயப்படாமல் இப்படி எழுதுவதற்கு  மிக மிக துணிச்சல் வேண்டும்.அவ்வளவு கோடிகள் அல்லோபதி மருந்து விற்பனை என்ற பெயரில் இந்த விஷங்களை விற்பதில் நடக்கிறது. மக்கள் விழிப்புணர்வு பெற்றால் இந்த அல்லோபதி மருந்து விற்பவர்கள் அத்தனை பேர் பிழைப்பிலும் மண்.

மருந்துகளால் ஏற்படும் நோய்கள் புத்தகத்திலிருந்து மேலும் சில பக்கங்கள். iyarrkai marunthukal1_mini

iyarrkai marunthukal 2_mini

iyarrkai marunthukal 3_mini

iyarrkai marunthukal 4_mini

iyarrkai marunthukal 5_mini

iyarrkai marunthukal 6_mini

iyarrkai marunthukal 7_mini

iyarrkai marunthukal 8_mini

iyarrkai marunthukal 9_mini

iyarrkai marunthukal 10_mini

iyarrkai marunthukal 11_miniiyarrkai marunthukal 12_mini

நன்றி , மருந்துகளால் வரும் நோய்கள் ,ஆசிரியர் திரு பஸ்லூர் ரஹ்மான் அவர்கள்.

அல்லோபதி மருத்துவத்தில் உள்ள வைட்டமின் மாத்திரைகளை போட்டவுடன் அவைகள் உடனே உடலை விட்டு வெளியேற்றப்படுகின்றன. எடுத்துக் காட்டாக பி-காம்ளக்ஸ் மாத்திரைகள்  போட்ட அடுத்த சில நிமிடங்களில் சிறு நீரில் போட்ட சத்து மாத்திரை, மஞ்சள் நிறமாக சிறு நீரகத்தால் வெளியேற்றப்படுகின்றன.

இயற்கையாக உள்ள சத்துக்கள் அடங்கிய சப்த தாது லேகியம் என்பது உடலோடு இயற்கையாக சேரும்.ஆனால் வைட்டமின் மாத்திரைகள் உடலில் இயற்கையாக சேராதது மட்டுமல்ல இவற்றை வெளியேற்ற உடலின் உள்ளுறுப்புக்கள் மிக சிரமப்பட்டு அவற்றின் சக்தியை வேறு வீணாக செலவிடப்பட்டு, சிறு நீரகம் , கல்லீரல் ,மண்ணீரல் போன்ற உள்ளுறுப்புக்கள் தளர்ந்துவிடுகின்றன.

எனவேதான் சித்தர்கள் ராச்சியம் தோழி அவர்கள் தேரையர் அருளிய தாது புஷ்டி லேகியம் என்ற கட்டுரையில் இந்த லேகியத்தை விட்டமின் மாத்திரைகளுடன் ஒப்பிட்டிருந்ததை கண்டித்து கருத்துரை எழுதியிருந்தோம்.அவர் அதை ஒப்புக் கொள்ளாமல் எழுதியிருக்கும் கருத்துரையையும் பாருங்கள்.

http://www.siththarkal.com/2013/02/thadhupushti.html

இந்தப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கினால்,ஒரு அரிய மருத்துவர் வீட்டில் இருப்பதை ஒத்ததாகும்.திரு மஹேஷ் ராஜா அவர்கள் போன்ற பலர் கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த புத்தகம் கிடைக்கும் இடம் மற்றும் முகவரி போன்ற சில விவரங்களை கீழே கொடுத்துள்ளோம்.

அவர்களிடம் விசாரிக்கும் போதும் ஒரு வியாபாரியிடம் பேசும் முகமாக பேசாமல் , மிகப் பணிவுடன் கேட்டு இந்தப் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளவும். எனவே திரு பஸ்லூர் ரஹ்மான் அவர்களிடம் பணிவு மிக முக்கியம்.

ஹெல்த் டைம் பப்ளிகேஷன்ஸ்,

17,(பழைய எண்) கஸ்டியன் பீச் ரோடு,

சாந்தோம் , சென்னை-600 004.

தொலை பேசி-044-24983534,24641333,]

அலை பேசி :- 98404 98898