சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 3)

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 2) ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படிக்கவும்.என்றால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

நீங்கள்பாட்டுக்கு நல்ல சர்க்கரை , கெட்ட சர்க்கரை என்று சொல்லுகிறீர்கள் , அலோபதி மருத்துவர் இவையெல்லாம் சுத்த ஹம்பக் என்று சொல்கிறார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது .நல்ல சர்க்கரையின் செயல்பாடுகள் பற்றியும் , கெட்ட சர்க்கரையின் செயல்பாட்டைப் பற்றியும் இதோ கீழே காணொளிப்படக் காட்சியாகத்  தந்துள்ளேன்.கண்டு தெளியுங்கள்.

இந்த சோதனையில் உபயோகிக்கப்படும் கந்தகத்தின் தன்மைகளை முதலில் பார்க்கலாம்.

பொதுவாக கந்தகம் என்ற சல்பர் ( SULFUR  ) , சித்த மருத்துவத்தில் கெந்தி , என்றும் சுரோணிதம் என்றும் சக்தி என்றும் பொன்வர்ணகாரி என்றும் நாறும் பூபதி என்றும் காரிழைநாதம் என்றும் அழைக்கப்படும். பாஷாணங்களில்  கடும் விஷம் கொண்டது . கந்தகம்  எரியும் போது கந்தக டை ஆக்ஸைடை வெளியிடும் .அந்த கந்தக டை ஆக்ஸைடு தண்ணீரில் கரையும் போது கந்தக அமிலமாக மாறும். இது உயிரினங்களுக்கு பலத்த  சேதாரத்தை ஏற்படுத்த வல்லது. அமெரிக்காவில் பல இடங்களில் இந்த  சுற்றுச் சூழல் சீர்கேட்டினால் அமில மழை  பொழிகிறது.அப்படிப்பட்ட கந்தகத்தின் குணங்களை கீழ்க்கண்ட இணப்புகளில் பாருங்கள்.

http://www.lenntech.com/periodic/elements/s.htm

http://en.wikipedia.org/wiki/Sulfur

இநதக் கந்தகத்தை புகை போடும் போது உற்பத்தியாகும் கந்தக டை ஆக்ஸைடால் (SULFUR  DI OXIDE ) இந்தச் சோதனையில் உபயோகிக்கப்படும் சிவப்பு ரோஜப்பூ வெளுத்துப் போவதைப் பாருங்கள். மீண்டும் நாம் சாதாரணமாக எண்ணும் கருப்பட்டியை புகை போட்டு அதைல்  மீண்டும் ரோஜப்பூவைக் காட்ட , கந்தகத்தின் நஞ்சை கருப்பட்டி புகை முறித்து ,நஞ்சு நீங்கியதால்  ரோஜாப்பூ தன்னுடைய இயல்பான நிறத்தை அடைவதைப் பாருங்கள்.

 ரோஜாப் பூக்கள்

கந்தகம்

கருப்பட்டி

உடைத்த கருப்பட்டி

[tube]http://www.youtube.com/watch?v=G6cXNFM7ysU[/tube]

இந்த கந்தகத்தை வைத்து உற்பத்தி செய்யப்படும் என்டோ சல்பான் ( Endosulfan ) (வேதியியல் அணுப் பெயர் C9H6Cl6O3S ) (வேறு  வேதிப் பெயர்கள் Benzoepin, Endocel, Parrysulfan, Phaser, Thiodan, Thionex )பூச்சி மருந்தை கேரளாவில் உள்ள காசர் கோடு என்ற இடத்தில் தெளித்ததால் மனிதனுக்கு விளைந்த விளைவுகளை இந்த இணைப்புகளில் காணலாம்.

href=”http://en.wikipedia.org/wiki/Endosulfan”>http://en.wikipedia.org/wiki/Endosulfan

href=”http://arunobsarathy.blogspot.in/2011/04/endosulfan.html”>http://arunobsarathy.blogspot.in/2011/04/endosulfan.html

href=”http://www.patientsville.com/toxic/endosulfan.htm”>http://www.patientsville.com/toxic/endosulfan.htm

href=”http://newszone4u.blogspot.in/2010/09/hell-in-kerala-gods-own-country.html”>http://newszone4u.blogspot.in/2010/09/hell-in-kerala-gods-own-country.html

http://www.spiderkerala.net/resources/6940-Endosulfan-Effects-Endosulfan-Human-Health.aspx

href=”http://vakkomsen.blogspot.in/2011/04/effects-of-endosulfan-in-human-body.html”>http://vakkomsen.blogspot.in/2011/04/effects-of-endosulfan-in-human-body.html

href=”http://godsowncountrys.wordpress.com/endosulfan-tragedy-in-kerala/”>http://godsowncountrys.wordpress.com/endosulfan-tragedy-in-kerala/

இந்தத் தொடரில் ஏன் இந்த என்டோ சல்பான் நுழைகிறது என்று உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா???நமது  நாளமில்லாச் சுரப்பிகளில் பல கேடுகளை விளைவிக்க வல்ல என்டோ சல்பான் {endocrine disruptor }நாளமில்லாச் சுரப்பியான கணையத்தின் மீதும் தன் தாக்குதல்களைத் தொடுக்கிறது .அதன் விளைவுதான் இத்தனை சர்க்கரை வியாதிக்காரர்கள் .அப்படிப்பட்ட  என்டோ சல்பான் நஞ்சையும் நீக்க வல்லது கருப்பட்டி என்றழைக்கப்படும் நம் பனங்கருப்பட்டி (பனை வெல்லம்).என்டோ சல்பான் விஷத்தால் பீடிக்கப்பட்டு சர்க்கரை வியாதிக்காளான  நோயாளர்கள்  கருப்பட்டியை சாப்பிட்டால் சர்க்கரை வியாதியில் இருந்து குணமாகலாம் .

எண்டோ சல்பான் பற்றி ஏற்கெனவே நமது மச்சமுனி வலைப்பூ இணப்பையும் கீழே கொடுத்துள்ளேன். பார்த்து தெளியவும்.

http://machamuni.blogspot.in/2011/08/blog-post.html

http://machamuni.blogspot.in/2011/07/blog-post.html

என்டோ சல்பானின் மேலும் பல தீங்குகள் பற்றி ஆங்கிலக் கட்டுரையின் சிறு பகுதி.

{Endosulfan is one of the most toxic pesticides on the market today, responsible for many fatal pesticide poisoning incidents around the world.[37] Endosulfan is also a xenoestrogen—a synthetic substance that imitates or enhances the effect of estrogens—and it can act as an endocrine disruptor , causing reproductive and developmental damage in both animals and humans. Whether endosulfan can cause cancer is debated. With regard to consumers’ intake of endosulfan from residues on food, the Food and Agriculture Organization of United Nations has concluded that long-term exposure from food is unlikely to present a public health concern, but short-term exposure can exceed acute reference doses.}

The World Health Organization estimated worldwide annual production to be about 9,000 metric tonnes (t) in the early 1980s.[13] From 1980 to 1989, worldwide consumption averaged 10,500 t per year, and for the 1990s use increased to 12,800 t per year.

சென்ற ஆண்டு  தமிழ் நாட்டிலுள்ள தஞ்சை காவிரி டெல்டாப் பகுதியில் பயிரிட்ட நெல்லில் மட்டும் சில லட்சம் லிட்டர்கள் எண்டோ சல்பான் தெளிக்கப்பட்டுள்ளது.எனில் அதைச் சாப்பிடும் அனைவரும் சர்க்கரை நோயாளிகள் (அது மட்டுமல்ல புற்று நோய் முதலான பெருங் கேடுகளையும் விளைவிக்க வல்லது ) ஆவது உறுதி . இதைத் தவிர்க்க அனைத்து இனிப்பு வகைகளுக்கும் இனி சீனியைத் (அஸ்கா சர்க்கரையை) தவிர்த்து  கருப்பட்டியை  உபயோகித்தால் இந்த அபாயத்தில் இருந்து முற்றிலும்  தப்பிக்கலாம்  . கருப்பட்டி அத்தனை நஞ்சையும் முறித்து நம்மைக் காக்கும் என்பதை மிக உறுதியாகக் கொள்ளலாம்.

கல்லீரலிலும் , மண்ணீரலிலும் சேரும் அலோபதி மருந்தெனும்  நஞ்சுகள் , உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் விளைவிக்கப்படும் உணவினால் ஏற்படும் நஞ்சுகளால் கல்லீரலும் , மண்ணீரலும் தள்ளாடுகின்றன. எனவே அவற்றால் ஜீரணத்திற்கு உதவும் பணியை செய்ய இயலாமல் இருக்கும் நிலையே சர்க்கரை வியாதி.கல்லீரலிலும் , மண்ணீரலிலும் இருக்கும் நஞ்சுகளை கருப்பட்டி முறித்து எறியும் .எனவே கல்லீரலும் ,மண்ணீரலும் முழு உயிரோட்டத்திற்குத் திரும்பும். அத்துடன் கருப்பட்டியானது  சர்க்கரை நோயயையும் வர விடாமல் தடுக்கும் வல்லமை கொண்டது.

அஸ்கா சர்க்கரையான சீனியும் இந்த கந்தகத்தைப் போலவே கடும் விஷத்தன்மை கொண்டது . 45 வகையான வேதிப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு கடும் உஷ்ணக் கட்டமைப்போடு வருகிறது .சுடுகாட்டில் மழை நேரத்தில் பிணத்தை எரிக்க சீனியைத்தான் உபயோகிக்கிறார்கள் எனில் அதன் உஷ்ணத்தன்மையை உணர முடிகிறதா????சீனி உடல் உள்ளுறுப்புக்களை சூடாக்கி அதன் செயல்பாட்டைப் பாழாக்குகிறது.

கீழ்க் கண்ட காணொளிக் காட்சியில் இந்த சீனியின் புகையும் ,கந்தகப் புகை போலவே ரோஜாப் பூவின் நிறத்தையும் , வளத்தையும் குறைக்கிறது.மீண்டும் கருப்பட்டிப் புகை அந்த ரோஜாப்பூவின் நிறத்தையும் வளத்தையும் திரும்பக் கொடுக்கிறது.

[tube]http://www.youtube.com/watch?v=L2r8EPAuhCw[/tube]

இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயத்தை பதிவு செய்ய விரும்புகிறோம் .நல்ல அமுதமான உணவைக் கொடுக்க வேண்டிய விவசாயிகள் நஞ்சான உணவைக் கொடுத்து நமது மனித சமுதாயத்தை பாழ்படுத்தி வருகிறார்கள் .அதற்கு அரசாங்கமும் ஒரு முக்கிய காரணம் .

ஆனால் அதே வேளையில் இந்தக் கருப்பட்டியை பல்லாயிரம் வருடங்களாக நஞ்சாகாமல் அமுதமாக இன்றளவும் வைத்திருக்கும் இரு சமுதாயத்தை இங்கே பாராட்டாமல் இருக்க முடியாது .அவர்கள்தான் பனையேறி நாடார்கள், மற்றும் கோனார்கள் என்னும் அற்புத மனிதர்கள்.இந்த வியாபார சந்தையில் இன்றளவும் விலைபோகாமல் கருப்பட்டி என்னும் கருப்புத் தங்கத்தை காப்பாற்றி வைத்திருக்கும் தேவதூதர்கள் இவர்கள் என்றும் கூறலாம்.

பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம்4) ல் தொடரலாம்.