தலைச்சன் பிள்ளை மண்டையோடு ( சித்தர் விஞ்ஞானம் ) பாகம் 2

சென்ற பதிவில் கேட்டிருந்தபடி உதவி செய்த அனைத்து புனித உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இனி ஒரு பதிவு இடுவோம்.

தலைச்சன் பிள்ளை மண்டை ஓடு பாகம்  ஒன்று படித்துவிட்டு இங்கே வரவும் .அப்படி என்றால்தான் மேலும் புரிய ஏதுவாக இருக்கும்.

தலைச்சன் பிள்ளை மண்டையோட்டை படாத பாடு பட்டு கொண்டு வந்து உரலில் போட்டு  , கன்னிக் குட நீரில் இடித்து  தண்ணீரில் கலக்கி சூரிய ஒளியில் காய்ச்சி எடுத்து அதை முப்பு என்று சொல்லித் திரிபவர்கள் பலர் கொடும் பாவம் செய்து வருகிறார்கள். அதற்கான் விடயங்களை கீழே காணுங்கள்.முப்பு என்பது மண்டையோடு அல்ல என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்து இது தெளிவாகும்.

மாதர் கருக்குட நீர் என்று குறிப்பிட்டு இருப்பதால் பெண்கள் பனிக்குட நீர் என்று தவறாக பொருள் கொண்டு பெண்கள் பிரசவிக்கும் போது கிடைக்கும் கசடு நீர் என்று எண்ணி பலரும் அந்த நீரை எடுத்து வந்து அதை வைத்து மருந்துகள் செய்து பார்க்கிறார்கள்.இதை அடிப்படையாக வைத்தே தற்போதுள்ள நவீன விஞ்ஞான மருத்துவர்கள் பிறந்த குழந்தைகளின் தொப்புள் கொடியில் இருந்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்து எந்த செல்களையும் உருவாக்கும் என்று கண்டு பிடித்துவிட்டோம்?????? என்று சொல்லி வருகிறார்கள்.

பொதுவாக சித்தர்கள் குறிப்பிடும் பொருட்களில் இந்த சிறப்புத் தன்மை இருப்பதாலேயே எல்லோரும் தவறாகவே முப்புவை கணிக்கிறார்கள்.அது உயிரற்ற வஸ்துவல்ல.அதற்கு அனைத்தையும் படைக்கும் வல்லமையைத் தரும் தன்மையும் .அனைத்தையும் அழிக்கும் வல்லமையையும் தரும்.எனவேதான் சித்தர்கள் இதை மறைத்து வைத்தார்கள்.இது இருந்தால் அவனுக்கு பஞ்ச பூதங்களும் கட்டுப்படும்.இட்ட ஏவல்களைச் செய்யும்.

எந்த மட்டமான உலோகத்தையும் தங்கமாக்கும் .அதனால் முப்பு முடிக்கத் தெரிந்த எந்த ரசவாதியும் பொருளாசையுடன் இருக்க மாட்டார்கள்.அவர்கள் பொருளாசையுடன் இருந்தால் முப்பு முடிக்கும் விதம் அவர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை.உங்களுக்கு இவ்வளவு பணம் கொடுத்தால் நான் முப்புவை உங்களுக்கு செய்வது எப்படி என்று சொல்லித் தருகிறேன் என்றால் அவன் உங்களை ஏமாற்றுகிறான் என்று பொருள்.ஏனென்றால் முப்பு முடித்தவனுக்குத்தான் பொருள் தேவையே இல்லையே ???? முப்பு முடித்தவன் நினைத்தால் கிலோ கணக்கில் தங்கமே செய்து கொள்ளலாமே ???பிறகெதற்கு உங்களிடம் பொருள் யாசிக்கிறான்???

நன்றி முப்பூ குரு ,ஆசிரியர், நீதியரசர் திரு பலராமையா அவர்கள்

மேலே சொன்னபடி நூல் முகமாகவோ அல்லது கட்டுரை மூலமாகவோ இதுதான் முப்பு என்று உணர்த்தவோ , சொல்லவோ , முடியாதென்பதைக் கவனியுங்கள் .

இயேசுவின் இரத்தம் என்பதும் , மாதர் கருக்குடத்து நீர் என்பதும் , செந்நீர் என்பதும் கீழுள்ள காணொளிக் காட்சியில் வாலையில் வடித்தெடுக்கும் செந்நீரேயாகும்.

வீடியோ 1

[tube]http://www.youtube.com/watch?v=qKcC_B_wDlI[/tube]

வீடியோ 2

[tube]http://www.youtube.com/watch?v=0IoYe2oCX5E[/tube]

வீடியோ 3

[tube]http://www.youtube.com/watch?v=w-UnlQSZ5DA[/tube]

பனங்கள் என்பதும் , வெள்ளைப் பால் என்பதும் ,மங்காய்ப் பால் {இதையே மாங்காய்ப் பால் (இதை மாங்காய் என்றால் மாங்காய் வடிவில் உள்ள பீனியல் சுரப்பி என்னும் ஞானச் சுரப்பி என்றும் அதில்  இருந்து வடியும் யோகாக்கினியால் சொட்டும் பால் என்றும் பொருள் கொள்வார்கள்)என்றும் அழைப்பார்கள்}  என்றும் அழைக்கும் இதன் காணொளிக்காட்சி இதோ கீழே .

வீடியோ  4

[tube]http://www.youtube.com/watch?v=rdyJG-T3i0M[/tube]

வீடியோ 5

[tube]http://www.youtube.com/watch?v=E5lJKjHy2Sw[/tube]

ஆனாலும் முப்பூகுரு என்ற மேலான கருப்பொருளை எல்லோரும் பெற்று இன்புற்று வாழ முதல் சித்தரான இறைவனையும் ,பதிணென் சித்தர்களான , பதி எண்  சித்தர்களையும்  வேண்டி இக்கட்டுரையை முடிக்கின்றேன்.

“எல்லோரும் வாழ இன்புற்று நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே”