வெண் தாமரைக் கற்பம் ( இதய நோயாளிகள் நலத்திற்கு )

வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் அருள் பெறவும் இதயத் தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் அருள் பெறவும் ஒரு கற்பம் இதோ கீழே விளக்கியுள்ளேன்.

வெண் தாமரை இதழ் ஒன்றும் செந்தாமரையின் இதழ் ஒன்றும் பணம் வைக்கும் பெட்டியில் வைக்க செல்வ சம்பத்தும் ,குபேர சம்பத்தும் உண்டாகும் என்றும் , லட்சுமி வசியம் உண்டாகுமென்றும் என்னிடம் உள்ள பழமையான நூல்கள் கூறுகின்றன.

பொதுவாக 30 வயதுக்கு மேல் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிவது சகஜம் .இந்த கெட்ட கொழுப்பை படியவிடாது கரைத்து எடுத்து வெளியே அனுப்புவதையும் ,நல்ல கொழுப்பை உடலில் நிலை நிறுத்தவும் வெண்தாமரைப் பொடி மிக,மிக நல்லது.  நல்ல கொழுப்பு இதயத்தின் இயக்கத்திற்கு உயவு எண்ணெய் போல இன்றியமையாதது.

வெள்ளைத் தாமரைப்பூ 

ஈரலைப் பற்றி மிக வேறுகின்ற வெப்பமும் போம்

கோர மருந்தின் கொடுமையறும் – பாருலகிற்

றண்டா மணத்தையுள்ள தாழ் குழலே காந்தல்விடும்

வெண்டா மரைப்பூவால்  விள்.

– குணபாடம் –

நாம் சாப்பிடும் அல்லோபதி மருந்துகள் ஈரலைத் தாக்கி கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்து ஒரு நாள் ஈரல் முழுவதும் கெட்டு  , அதனால் உடலில் உள்ள ராஜ கருவிகள் (சிறு நீரகம் , மண்ணீரல் ,இதயம் ) அனைத்தும் கெட்டு மரணமும் அருகில் வந்துவிடுகிறது .

 ஈரல் இல்லையென்றால் நம்மை ஒரு சாதாரணமாக இரு சக்கர வாகனப் புகையில் இருந்து வரும் விஷ வாயுக்களே சாகடிக்க போதுமானது.அந்தளவிற்கு முக்கியம் வாய்ந்த ஈரலை , ஒரு மாத்திரை போட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என்று கொஞ்சம் , கொஞ்சமாக சாகடிக்கிறோம் . விளைவு ஈரல் தன் வேலையை சரியாக செய்ய முடியாத அளவிற்கு விஷமித்துவிடுகிறது.இந்த ஈரலில் சேர்ந்த விஷத்தை நீக்குவதில் வெண்தாமரைப் பொடி சிறந்தது.

நாம் இதயத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஈரலுக்கு கொடுப்பதில்லை. இதயம் நின்றுவிட்டால் உயிர் உடனே போய்விடும் .ஆனால் ஈரலை முக்கால் வாசி வெட்டி எடுத்துவிட்டாலும் வளர்ந்து முழுதாகிவிடும்.அவ்வளவு சிறப்பை ஈரலுக்குக் கொடுத்திருக்கிறான் இறைவன் .ஆனால் இந்த ஈரல் இல்லையேல் ,இரத்தத்தில் விஷத்தன்மை உயர்ந்து  இதயம் வெகு விரைவில் தன் பணியை  முடித்துக் கொள்ளும்.

எனவேதான் கிராமத்தில் மனம் பொறுக்காத் விடயத்தை இப்படிக் கூறுவார்கள் ///என் ஈரக் கொலையே நடுங்கீருச்சு///.ஈரல் கெட்டுவிட்டால் காரணமற்ற மனவருத்தத்தை  கொடுக்கும். தூக்கத்தில் பயங்கர கனவு ( TREMORS   ) கண்டு விழித் தெழுவது ஆகியவை நடக்கும் .

ஈரலைப் பற்றி மேலேறி இதயத்தை தாக்குகின்ற உஷ்ணத்தையும் ,அந்த உஷ்ணத்தினால் அபான வாயு  சூடாகி விரிவடைந்து இதயத்தை தாக்கும் .இதற்கு தமரக வாய்வு ( HEART  ATTACK )  என்று பெயர் .இந்த சூட்டைத் தணித்து தமரக வாயுவால் ஏற்படும் இதயத்  தாக்குதலை  தடுக்க 30 வயதிற்கு மேற்பட்ட  அனைவருமே வெண்தாமரைப் பொடி, வருடத்திற்கு 48 நாட்கள் தேனில் குழைத்து சாப்பிட்டு வர மேற்கண்ட  பிரச்சினைகள் அகலும் . மேலும் பல நோய்கள் அண்டாமல் தடுக்கும்.

டெங்கு காய்ச்சலுக்கு உள்ள பற்பாடகம் ,விஷ்ணு கிராந்தி , விராலியிலை போன்ற பொருட்களும் அவரிடமே கிடைக்கும்.