என் குருநாதர்களில் தலையாயவர் ( வெங்கடாசலபதி ) பாகம் 4

July 14, 2012 by: machamuni

எமது குருநாதர் சிவ ரசத்தையும் சக்தி ரசத்தையும் சேர்க்க ,ரசத்தை சூட்சும சீனத்தைக்  ( பொதுவாக படிகாரத்தைத்தான் சீனம் என்று ரச சித்தர்கள் குறிப்பிடுவார்கள்.ஆனால் இது படிகாரமல்ல ) கொண்டு ரசத்தை கடுங்காரச் சுண்ணமாக்குகிறார். அந்தச் சுண்ணத்தை சுத்த கங்கையைக் கொண்டு உண்ணக் கூடிய வகையில் திராவகமாக்குகிறார்.

பொதுவாக பாதரசமானது சாதாரண வெப்ப நிலைக்கே விரிவடையும். பின் ஆவியாகி புகையாகும்.இதனாலேயே தங்க ஆசாரிகள்.பாதரசத்தை அவர்கள் வைத்திருக்கும், தங்கம் காய்ச்சி உருக்கிய குகையுடன் வைத்து அரைத்து கழுவிவிடுவார்கள். மண் போன பின் ரசமும் தங்கமும் சேர்ந்த கலவை மீதமாகும்.அந்த கலவையை சூடாக்கினால் பாதரசம் ஆவியாகும் .பின் மீதமுள்ள தங்கம் கிடைக்கும்.

ஆனால் ஆவியாகும் ரசம் சுவாசிக்கப்பட்டால் , நுரையீரலைக் கெடுக்கும், உடலில் சேர்ந்தால் சிறுநீரகம் ,கல்லீரல் , மண்ணீரல் முதலிய ராஜ கருவிகளுக்கு  கடும் பாதிப்பை உண்டாக்கும்.ஆனால் மிக உயர்ந்த சூட்சும சீனத்துடன் ( முப்பூ குரு) சேரும்போது புலி ஆட்டைக் கவ்வுவது போல சூட்சும சீனம் பாதரசத்தை ( சாதாரணமாக ஆவியாகும்  பாதரசம் விஷத் தன்மையில் புலி  போன்றது. ) ஆனால் இந்தச் சூட்சும சீனத்தின் முன் ஆடாக மண்டியிடுகிறது. ஒளிப்படக்காட்சியை பாருங்கள்.

அந்தத் திராவகத்தின் படம்

அந்தத் திராவகத்தை உண்டதனால் உடலில் உள்ள அதிகத் தண்ணீர் வறட்டப்பட்டு உடல் இறுகும்.அந்தத் தேகத்தை இன்னும் சில நாட்களில் படத்தில் காணலாம்.

இந்த கட்டுரையை மீண்டும் சில புகைப்படம் முதலான சில விடயங்களுடன் விரிவாக்கம் செய்திருக்கிறேன். படித்துப் பயன் பெறுங்கள்.

Comments

9 Responses to “என் குருநாதர்களில் தலையாயவர் ( வெங்கடாசலபதி ) பாகம் 4”
  1. drbaskar says:

    ஐயா,ஒவ்வொரு பதிவும் பிரமிக்கவைக்கிறது..உங்கள் அனைவருடன் ,எப்பொதும் உடன் இருக்க முடியவில்லையெ என வருத்தமாகவும் இருக்கிற‌து

    • machamuni says:

      அன்பு மிக்க திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
      எம் குருநாதரின் தயவிது.இறைவன் அளித்த வாய்ப்பிது.பகிரங்கமாக்க இறைவன் விரும்பியதால் நடக்கிறது.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

  2. chinna says:

    அன்புள்ள அய்யா
    அற்புதமான பதிவு.மிக்க நன்றி.
    நாதவிந்து கலாதி நமோ நம
    நற்பவி சின்னா

    • machamuni says:

      அன்பு மிக்க திரு சின்னா அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

  3. chinna says:

    அன்புள்ள அய்யா
    ////மண் போன பின் ரசமும் தங்கமும் சேர்ந்த கலவை மீதமாகும்.அந்த கலவையை சூடாக்கினால் பாதரசம் ஆவியாகும் .பின் மீதமுள்ள தங்கம் கிடைக்கும்/// நீங்கள் பலதுறை வல்லுநர் என்றால் மிகையாகாது.
    குப்பையுடன்/ மண்ணுடன் கலந்த தங்கத்தை மேற்கண்ட முறையில் பிரித்து எடுப்பார்கள்.ஆவியான ரசம் அறையில் மேலேயே தங்கிவிடுமா
    அல்லது வெளியே சென்று விடுமா என்று தெரிவிக்கவும்.இதனால்
    உடம்புக்கு பாதிப்பு ஏற்படுமா?(தெரிந்தவர் நகைவேலை செய்பவர்)
    நற்பவி சின்னா

    • machamuni says:

      அன்பு மிக்க திரு சின்னா அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
      உங்கள் கேள்விக்குப் பின்னர் கட்டுரையில் பல விடயங்களைச் சேர்த்து விரிவாக்கம் செய்துள்ளோம்.மீண்டும் படித்துப் பாருங்கள்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

  4. chinna says:

    அன்புள்ள அய்யா,
    ரசம் ஆவியாவது பற்றிய உண்மையை அறிந்துகொண்டேன். மிக்க நன்றி.எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பானாக.
    என்றும் அன்புடன் சின்னா

  5. drbaskar says:

    ஐயா,வரும் பவுர்ண்மி பாண்டியுர் சித்த ஞானசபைக்கு நன்பர்களுடன் வருவதற்கு ticket book செய்து விட்டோம்.உஙகளை சந்திக்க மிக மிக ஆவலாக உள்ளோம்.

    • machamuni says:

      அன்பு மிக்க திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே,
      கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
      வாருங்கள்.காத்திருக்கிறோம்.
      மிக்க நன்றி
      என்றென்றும் பேரன்பினால்
      சாமீ அழகப்பன்

Trackbacks

Leave a Reply


8 − = 2